திருக்கோவிலுார் தபோவனத்தில் ஞானானந்தகிரி ஆராதனை விழா
ADDED :3255 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், ஸ்ரீஞானானந்த தபோவனத்தில், ஞானானந்தகிரி சுவாமிகளின் 43வது ஆராதனை விழா நடந்தது. திருக்கோவிலுார், ஸ்ரீ ஞானானந்தகிரி சுவாமிகள் தபோவனத்தில் சுவாமிக ளின் 43வது ஆராதனை விழா கடந்த 1ம் தேதி துவங்கியது. விழாவில், தினசரி பாதபூஜை, ஹோமம், பாராயணம், அகண்டதாரா நாம ஜபம், பரனுார் ஸ்ரீ கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் உபன்யாசம் நடந்தது. நேற்று அதிகாலை 5:30 மணிக்கு விசேஷ பாதபூஜை, லட்சார்ச்சனை பூர்த்தி, விசேஷ அதிஷ்டான பூஜை, அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பகல் 1:30 மணிக்கு ஆராதனை, தீர்த்த நாராயண பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.