உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.17 லட்சம்

திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை ரூ.17 லட்சம்

திருத்தணி : திருத்தணி முருகன் கோவில் உண்டியலில், ஏழு நாட்களில் பக்தர்கள், 17.22 லட்சம் ரூபாய் ரொக்கம், 26 கிராம் தங்கத்தை காணிக்கையாக செலுத்தி உள்ளனர். திருத்தணி முருகன் மலைக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை வழிபட்டு தங்களது காணிக்கைகளை உண்டியலில் செலுத்துகின்றனர். அந்த வகையில், ஏழு நாட்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் சிவாஜி, திருவள்ளூர் உதவி ஆணையர் ஜான்சிராணி, திருத்தணி உதவி ஆணையர் ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல் திறக்கப்பட்டு கோவில் ஊழியர்களால் எண்ணப் பட்டது. இதில், 17,22,309 ரூபாய் ரொக்கம், 26 கிராம் தங்கம், 1,091 கிராம் வெள்ளி ஆகிய இருந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !