உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பறவைக்காவடியில் பக்தர்கள் பரவசம்

பறவைக்காவடியில் பக்தர்கள் பரவசம்

வால்பாறை :தைப்பூசத்திருவிழாவில், நேற்று பக்தர்கள் பறவைக்காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.வால்பாறை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், 12ம் ஆண்டு தைப்பூசத்திருவிழா கடந்த, 5 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் நேற்று காலை, 10:00 மணிக்கு வால்பாறை காமாட்சிஅம்மன் கோவிலிருந்து தீர்த்தம், பால்குடம் ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, சுவாமிக்கு அபிேஷக பூஜை செய்யப்படுகிறது. நல்லகாத்து பாலத்திலிருந்து பக்தர்கள் பறவைக்காவடி, அழகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர்.இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !