உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாசி மாத அமாவாசை திருத்தணி அம்மன் கோவிலில் பூஜை

மாசி மாத அமாவாசை திருத்தணி அம்மன் கோவிலில் பூஜை

திருத்தணி: மாசி மாத அமாவாசையையொட்டி, மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவில் உட்பட திருத்தணி நகரில் உள்ள அம்மன் கோவில்களில், பாலாபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. திருத்தணி அடுத்த, மத்துார் கிராமத்தில் உள்ள மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில், நேற்று, கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, காலை, 8:00 மணிக்கு, மூலவருக்கு பாலாபிஷேகம், மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. மதியம் உச்சிகால பூஜையும், மாலை, 4:30 மணி முதல், மாலை, 6:00 வரை, ராகுகால பூஜையும் நடந்தது. அமாவாசையையொட்டி, திரளான பெண்கள் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். மாலை, 6:30 மணிக்கு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதே போல், திருத்தணி நகரில் உள்ள, படவேட்டம்மன் கோவில், தணிகை மீனாட்சி அம்மன் கோவில், தணிகாசலம்மன் கோவில், வன துர்க்கை அம்மன் மற்றும் பழைய பஜார் தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆகிய கோவில்களில் அமாவாசையையொட்டி, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !