உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை விழா ஆலோசனை

வேதகிரீஸ்வரர் கோவில் சித்திரை விழா ஆலோசனை

திருக்கழுக்குன்றம்;திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலின், சித்திரை பெருவிழா ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், ஆண்டுதோறும் நடை பெறும் சித்திரை பெருவிழா, இந்தாண்டு, ஏப்., 30ல், கொடியேற்றத்துடன் துவங்குகிறது; மே 10ம் தேதி முடிவடைகிறது. விழாவிற்கான ஆலோசனை கூட்டம், கோவில் வளாகத்தில், செயல் அலுவலர் தியாகராஜன் தலைமையில் நடைபெற்றது. இதில், அழைப்பிதழில் குறிப்பிட்ட நேரத்தின் படி நிகழ்ச்சி நடக்க வேண்டும்; கடந்தாண்டு சுவாமிக்கு நகை சார்த்தப்படவில்லை. இந்தாண்டு கண்டிப்பாக நகை சார்த்த வேண்டும்; சுவாமி முதலில், தீர்த்தவாரிக்கு சென்று, பின் மாட வீதி வரவேண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் ஆலோசிக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !