உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வால்பாறை பிரதோஷ பூஜையில் திரண்ட பக்தர்கள்

வால்பாறை பிரதோஷ பூஜையில் திரண்ட பக்தர்கள்

வால்பாறை: சுப்பிரமணியசுவாமி கோவிலில் நடந்த பிரதோஷ பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இக்கோவிலில்  எழுந்தருளியுள்ள காசிவிஸ்வநாதர் சன்னதியில், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு சந்தனம், திருநீர்,இளநீர், பால், தயிர், மஞ்சள் உள்ளிட்ட, 16 வகையான அபிேஷக பூஜைகள் செய்யப்பட்டன. மாலை , 6:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் காசிவிஸ்வநாதர்  பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காசிவிஸ்வநாதர் தேவியருடன் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவிலை வலம் வந்தார்.  பிரதோஷ பூஜையில் நுற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !