உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அழகர்கோவில் சித்திரை திருவிழா: உற்சவ சாந்தியுடன் நிறைவு

அழகர்கோவில் சித்திரை திருவிழா: உற்சவ சாந்தியுடன் நிறைவு

அழகர்கோவில்: மதுரை வைகை ஆற்றில் இறங்குதல் உட்பட பல்­வேறு அலங்காரங்களில் எழுந்தருளி அருள்பாலித்து நேற்று காலை கோயிலுக்கு திரும்பிய கள்­ளழகரை பக்தர்கள் மலர் துாவியும், திருஷ்டி சுற்றியும் வரவேற்றனர். அழகர்கோவில் சுந்தர ராஜபெருமாள் கோயில் சித்திரை திருவிழா மே6ல் துவங்கியது. மே 10ல் தங்க குதிரைவாகனத்தில் புறப்பட்ட கள்­ளழகர் தல்லாகுளம் கருப்பண சுவாமி சன்னதி முன் வெட்டிவேர் மற்றும் ஆயிரம் பொன் சப்பரங்களில் எழுந்தருளினார். காலை 6.20 மணிக்கு லட்சக்கணக்கான பக்தர்களின் ‘கோவிந்தா ’கோஷம் முழங்க வைகையில் இறங்கினார். நேற்று காலை 11:20 மணிக்கு அழகர் கோவிலுக்கு திரும்பிய கள்ளழகருக்கு 18ம் படி கருப்பணசுவாமி சன்னதியில் தீபாராதனை நடந்தது. கோயிலுக்குள் வந்த கள்ளழகரை அங்குதிரண்டிருந்த ஏராமான பக்தர்கள் மலர்கள் துாவி ‘கோவிந்தா ’ கோஷம் முழங்க வரவேற்றனர். 18 பெண்கள் பூசணிக்காயில் சூடம் ஏற்றி கள்ளழகரை 3 முறை சுற்றி வந்து திருஷ்டி கழித்தனர். கோயிலுக்குள் சென்ற கள்­ளழகருக்கு தீபஆராதனை நடந்தது. இன்று உற்சவசாந்தியுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாஜலம், நிர்வாக அதிகாரி மாரிமுத்து தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !