உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முக்குளத்தீஸ்வரர் கோவிலில் கூட்டு பிரார்த்தனை

முக்குளத்தீஸ்வரர் கோவிலில் கூட்டு பிரார்த்தனை

திருவள்ளூர்: மேல்நல்லாத்துார் முக்குளத்தீஸ்வரர் கோவிலில், 1,008 செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்யப்பட்டு, கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. திருவள்ளூர் அடுத்த, மேல்நல்லாத்துார், முக்குளத்தீஸ்வரி சமேத முக்குளத்தீஸ்வரர் கோவிலில், கூட்டு வழிபாடு நடந்தது. இதில், அன்று செந்தாமரை வழிபாடு, மாலை 5:00 மணி முதல், இரவு 6:30 மணி வரை முக்குளத்தீஸ்வரர் அடியார்களும் மணவாள நகர் நால்வர் திருமடத்தை சேர்ந்தவர்களும் கூட்டு பிரார்த்தனை நடத்தினர். தேவாரம் திருவாசகம் ஓதியும், 1,008 தமிழ் வேத திருமுறை போற்றியும், உலக நலனுக்காக 1,008 செந்தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து, கூட்டு பிரார்த்தனை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !