பழநி முருகன் மலைக்கோயில் ரோப்கார் சேவை இன்று ரத்து
ADDED :3372 days ago
பழநி: பழநி முருகன் மலைக்கோயில் ’ரோப்கார்’ மாதாந்திர பராமரிப்பு பணிக்காக இன்று (ஜூன் 15) ஒருநாள் மட்டும் நிறுத்தப்படுகிறது. பழநி மலைக் கோயிலுக்கு பக்தர்கள் மூன்று நிமிடத்தில் எளிதாக செல்ல ’ரோப்கார்’ இயக்கப்படுகிறது. இதில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணியில் உருளைகள், கம்பிவடம், பெட்டிகளை கழற்றி ஆயில், கிரீஸ் இடுவது என பணியாற்றுவர். பின் ஒவ்வொரு பெட்டிகளிலும் குறிப்பிட்ட அளவு எடை கற்கள் வைத்து சோதனை ஓட்டம் நடைபெறும். அதில் பாதுகாப்பான பயணம் உறுதிசெய்தபின் ’ரோப்கார்’ நாளை (ஜூன் 16) முதல் வழக்கம்போல் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என, பழநிகோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.