உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் ஊஞ்சல் திருவிழா: ஜூன் 29ல் தொடக்கம்

திருப்பரங்குன்றம் ஊஞ்சல் திருவிழா: ஜூன் 29ல் தொடக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆனி ஊஞ்சல் திருவிழா ஜூன் 29ல் சுவாமிகளுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது.

திருவிழாவை முன்னிட்டு ஜூன் 29ல் உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் பூஜைகள் முடிந்து காப்பு கட்டப்படும். சுவாமி, அம்மன் புறப்பாடாகி ஆஸ்தான மண்படத்தை வலம் சென்று திருவாட்சி மண்டபத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஊஞ்சலில் எழுந்தருள்வர். கோயில் ஓதுவார்களால் தேவாரம் பாடப்படும். சுவாமி 30 நிமிடங்கள் ஊஞ்சல் ஆடும் நிகழ்ச்சி நடக்கும். ஜூலை 7வரை இந்த ஊஞ்சல் உற்சவம் நடக்கும்.  திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக ஜூலை 8 அன்று மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஷ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை, உற்சவர் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு மா, பலா, வாழை முக்கனிகள் படைக்கப்பட்டு பூஜைகள் நடக்கும்.  இரவு யானை மண்டபத்தில் உற்சவர் எழுந்தருளி, கோயில் யானை தெய்வானைக்கு பரிவட்டம் கட்டி மரியாதை செய்யப்பட்டு தீபாராதனை நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !