பிரம்மோற்சவம் என்றால் என்ன?
ADDED :3077 days ago
கோவில்களில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட மாதத்தில் நடக்கும் திருவிழாவை பிரம்மாவே நடத்துவதாக ஐதீகம். பிரம்மாவின் பெயரால் பிரம்மோற்சவம் என்று பெயர் வந்தது. ஆகம அடிப்படையில் வழிபாடு நடக்கும் பெரிய கோவில்களில் மட்டுமே இதை நடத்துகின்றனர். மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பெரிய கோவில்களில் ஆண்டின் 12 மாதமும் கொடியேற்றி பிரம்மோற்சவம் நடத்துகிறார்கள். ஆனால், குறிப்பிட்ட மாத விழாக்கள் மட்டுமே எல்லாருக்கும் பிரசித்தமாக இருக்கும்.