ஆஞ்சநேயருக்கு அணிவிக்கும் மாலைகளால் கிடைக்கும் பலன்!
ADDED :3150 days ago
வடைமாலை: எதிரிகள் தொல்லை நீங்குதல், வழக்குகளில் சாதக தீர்வு
வெற்றிலை மாலை: சுபநிகழ்வு களில் தடை நீங்குதல், தொழில் வெற்றி
துளசி மாலை: சகல பாவநிவர்த்தி
வடைமாலை : பைரவருக்கும், ஆஞ்ச நேயருக்கும் வடைமாலை அணிவிக்கும் வழக்கம் பக்தர் களிடம் உள்ளது. ராம பட்டாபிஷேகத்தின் போது, சீதாதேவி ஆஞ்சநேயருக்கு முத்துமாலை ஒன்றைப் பரிசளித்தாள். இதை வடக்கே வடமால்யா என்று சொல்வார்கள். இது தென்னகத்தில் வடை மாலையாகி விட்டது. போதாக் குறைக்கு ஆஞ்சநேயர் வானரமுகம் கொண்டவர் என்பதால், வானரத்துக்குப் பிடித்த வடைமாலை அணியும் வழக்கம் வந்துவிட்டது. எப்படியிருப் பினும், பக்தியுடன் இதை அணிவிப்பதால் பலன் உண்டு. பைரவருக்கு வாகனம் நாய். அதற்கும் வடை பி டிக்கும் என்பதால், வடைமாலை அணிவிக்கும் வழக்கம் வந்து விட்டது.