உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி விழா கோலாகலம்

ஊத்துக்கோட்டை : திரவுபதி அம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீமிதித்தனர். எல்லாபுரம் ஒன்றியம், பெரம்பூர் கிராமத்தில் உள்ளது ஸ்ரீதிரவுபதி அம்மன் கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், ஆனி மாதம் கடைசியில் தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, கடந்த மாதம், 31ம் தேதி கொடியேற்றத்துடன், தீமிதி திருவிழா துவங்கியது. ஒவ்வொரு நாளும், மாடு பிடி சண்டை, பட்டாபிஷேகம், திருக்கல்யாணம் என, நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் மாலை, விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தீமிதி திருவிழா நடந்தது. இதில், கிராமத்தைச் சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். அப்போது, கூடியிருந்த பக்தர்கள் பக்தியில், கோவிந்தா, கோவிந்தா என கோஷமிட்டனர். தொடர்ந்து உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !