திருவெண்ணெய்நல்லூரில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED :5078 days ago
திருவெண்ணெய்நல்லூர் :திருவெண்ணெய்நல்லூர் சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. திருவெண்ணெய்நல்லூர் மங்களாம்பிகை சமேத கிருபாபுரீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று காலை பஞ்சமூர்த்திகளுக்கு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மாலை 4 மணிக்கு நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், இளநீர், ஜவ்வாது உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு மங்களாம்பிகை, கிருபாபுரீஸ்வரர் தம்பதி சமேதராக அலங்கரிக்கப்பட்டு கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.