உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கல்பட்டு மணப்பாக்கம் கன்னி கோவில் தீமிதி விழா

செங்கல்பட்டு மணப்பாக்கம் கன்னி கோவில் தீமிதி விழா

செங்கல்பட்டு;மணப்பாக்கம் கன்னிகோவிலில், தீ மிதி விழா, கோலாகலமாக நடந்தது.

செங்கல்பட்டு அடுத்த, மணப்பாக்கம் கிராமத்தில்பாலாற்றங்கரையில், புகழ்பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் ஆடித்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.இந்த ஆண்டு, ஆடித்திரு விழா, கடந்த மாதம் 21ல், கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகத்துடன் துவங்கியது.

தினமும், அம்மனுக்குசிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. காலை, 5:00 மணிக்கு, மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமையை யொட்டி, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

மாலை, 5:00 மணிக்கு, தீ மிதி விழா நடந்தது. இதில், 5,000க்கும்மேற்பட்டோர், குண்டத்தில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர்.செங்கல்பட்டிலிருந்து மணப்பாக்கத்திற்கு அரசு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.செங்கல்பட்டு காவல் துணை கண்காணிப்பாளர் மதிவாணன், தாலுகா காவல் ஆய்வாளர் சக்திவேல் தலைமையில், 250க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !