சபரிமலை சிறப்பு தரிசனம் பக்தர்கள் ஏமாற்றம்!
ADDED :5226 days ago
தாடிக்கொம்பு : சபரிமலை ஐயப்பன் கோயிலில், டிச., 13 வரைக்கான சிறப்பு தரிசன முன்பதிவு, நேற்று முன்தினத்துடன் முடிந்து விட்டது.சபரிமலையில் கடந்த ஆண்டு மகர ஜோதி தரிசனத்தின் போது, கூட்ட நெரிசலால் ஏராளமான பக்தர்கள் உயிரிழந்தனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, சிறப்பு தரிசன முன்பதிவு முறையை, கேரள போலீசார் அறிமுகப்படுத்தினர். போட்டோ, ஏதாவது ஒரு அடையாள அட்டை நகல் இணைத்து, இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம். இதன்படி தரிசன தேதி, நேரம் ஒதுக்கப்படும்.ஏமாற்றம்:டிச., 13 வரை சிறப்பு தரிசனத்திற்கான முன்பதிவு, நேற்று முன்தினம் இரவே முடிந்து விட்டது. டிச., 14 முதல் 27 வரை மட்டுமே முன்பதிவு செய்ய முடிகிறது. அதற்கு பின், முன்பதிவு செய்ய முடியவில்லை. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.