உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாவத்திற்கு மன்னிப்பு கேளுங்கள்

பாவத்திற்கு மன்னிப்பு கேளுங்கள்

ஆங்கில நாவல்களில் வரும் துப்பறியும் கதாபாத்திரம் ஷெர்லாக் ஹோம். இவரைக் கதாநாயகனாக கொண்டு நாவல்களை எழுதியவர் சர். ஆர்தர் கேனன் டாயில். டாயிலுக்கு 12 நண்பர்கள் இருந்தனர். ஒருமுறை, டாயில் வேடிக்கையாக 12 பேருக்கும் ஒரு மொட்டை தந்தி அனுப்பினார். அதில், “உங்கள் ரகசியங்கள் அம்பலமாகப் போகிறது. தப்பி விடுங்கள், என்று குறிப்பிட்டிருந்தார். தந்தி கிடைத்த 24 மணி நேரத்திற்குள், எல்லா நண்பர்களும் நாட்டை விட்டே ஓடிவிட்டனர். ஏனெனில், எல்லாருமே சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டிருந்தவர்கள். சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் ஓடிவிட்டனர். தனது நண்பர்களை ஒழுக்கம் மிகுந்தவர்களாக மாற்ற டாயிலுக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. உங்கள் பாவம் உங்களை தொடர்ந்து வந்து பிடிக்கும், என்கிறது பைபிள். பாவச் செயல்களில் இருந்து அவர்களை மீட்கவே டாயில் இந்த நடவடிக்கையை எடுத்தார். பாவம் செய்தவர்கள், இயேசுவிடம் அவற்றை பகிரங்கமாகச் சொல்லி மன்னிப்பு தேட வேண்டும். மீண்டும் அவற்றைச் செய்யக்கூடாது. திருந்த மறுத்தால், எந்த பாவத்தைச் செய்தார்களோ, அதே பாவத்தாலேயே அழிந்து போவர். அத்துடன் ஆண்டவரின்
சன்னிதானத்தில் கடும் தண்டனையையும் அனுபவிப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !