உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருத்தணியில் கோகுலாஷ்டமி விழா

திருத்தணியில் கோகுலாஷ்டமி விழா

திருத்தணி : திருத்தணியில் நடந்த கிருஷ்ணர் கோகுலாஷ்டமி விழாவில், திரளான பக்தர்கள் பங்கேற்று, வழிபட்டனர். திருத்தணி - அரக்கோணம் சாலை, சுப்ரமணியபுரம் பகுதியில், கிருஷ்ணருக்கு, கோகுலாஷ்டமி விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது.உற்சவர் கிருஷ்ணருக்கு பால், தயிர், தேன், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் போன்ற அபிஷேக பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரம் மற்றும் தீபாராதனையும் நடந்தது.அங்கு நடந்த கல்யாண மாலை பூஜையில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை, நெமிலி குருக்கள் ரங்கநாதன் மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தனர். முன்னதாக, பரிகார பூஜைகள் நடந்தன. ஒவ்வொரு மாதமும், கிருத்திகைக்கு மறுநாள் கோகுலாஷ்டமி விழா நடத்தப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !