உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கும், மற்ற கோபுரங்களுக்கும் வித்தியாசம் உண்டா?

கோயிலில் உள்ள ராஜகோபுரத்திற்கும், மற்ற கோபுரங்களுக்கும் வித்தியாசம் உண்டா?

"ஆலயம் புருஷாகாரம் என சிற்ப சாஸ்திரம் கூறுகிறது. அதாவது கோயிலை மனித வடிவாக உருவகப்படுத்திக் கொள்ள வேண்டும். கருவறை – தலை; மகாமண்டபம் – மார்பு; பிரதான ராஜகோபுரம் – திருவடிகள். திருவடி தரிசனமே மிக உயர்ந்தது என்பதால் "கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என சொல்கிறோம். எனவே ராஜகோபுரம் என்பது தனிநிலை. மற்ற வாசல்களில் உள்ள கோபுரங்கள் கோயிலின் அமைப்பை பொறுத்து அமையும்.  இவைகளுக்கும் தனித்தனி சிறப்பு இருந்தாலும்,  எல்லாக்கோயில்களிலும் இவை இருப்பதில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !