உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா

எமனேஸ்வரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் பெருந்தேவி சமேத வரதராஜப் பெருமாள் கோயிலில் ரதசப்தமி விழா நடந்தது. நேற்று காலை பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன்  புஷ்ப சப்பரத்தில் எழுந்தருளினார்.  பக்தர்கள் சுவாமி தேரினை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 5:00 மணிக்கு சன்னதியை அடைந்த பெருமாள் கோயிலுக்குள் எழுந்தருளினார்.

*பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி  காலை 10:00 மணிக்கு கோயிலில் இருந்து புறப்பட்டு, மண்டபத்தில் சேர்க்கையாகினார்.  தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு முக்கிய வீதிகளில் வலம் வந்த பெருமாள் மாலை 6:00 மணிக்கு கோயிலை அடைந்தார். ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !