ஆகாயத்தில் பயந்த யானை
குருக்ஷேத்திர யுத்தம் உக்கிரமாக நடந்து கொண்டிருந்தது. கவுரவர்களின் படையை சேர்ந்த யானைகள் சுற்றி நின்று பாண்டவர்களை தாக்கின. அசகாய சூரனான பீமன் யானை கூட்டத்துக்கு நடுவே பாய்ந்தான். ஒரு யானையின் காலைப் பிடித்து துõக்கி கரகரவென சுற்றினான். மேலேநோக்கி வீசினான். அன்று வீசப்பட்ட யானை இன்று வரை கீழே விழவேயில்லை. காரணம், அது பூமியின் ஆகர்ஷண பகுதியையும் தாண்டி வெகுதுõரம் போய்விட்டது. தர்மத்தைக் காப்பதற்காக, கிருஷ்ணர் அத்தகைய சக்தியை பாண்டவர்களுக்கு அளித்திருந்தார். குருக்ஷேத்திரம் புண்ணிய பூமி. காசியில் தரைத்தளத்தில் (பூமி) மரணம் நேர்ந்தால் முக்தி, பிரயாகையில் தரைத்தளமோ, அங்கு ஓடும் ஆறோ.. எதில் மரணம் சம்பவித்தாலும் முக்தி தான். குருக்ஷேத்திரம் தர்மபூமி என்பதால் தரை, தீர்த்தம், ஆகாயம் எங்கு இறந்தாலும் முக்தி கிடைக்கும். ஏனெனில், அது கிருஷ்ணர் நின்ற பூமி. குருக்ஷேத்திர போரில் எல்லாருமே, கடைசியாக, கிருஷ்ணனின் திருமுகத்தைப் பார்த்தபடி இறந்ததால், மோட்சத்தை எட்டினர். போரில் பங்கேற்ற யானை, குதிரைகள் கூட மோட்சத்தை அடைந்தன.