உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கார்த்திகை சஷ்டி; கோவை பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

கார்த்திகை சஷ்டி; கோவை பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடு

கோவை; கார்த்திகை மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு கோவை ராம் நகர் பட்டேல் ரோடு ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் மூலவர் மற்றும் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. இதில் உற்சவர் வள்ளி தேவசேனா சமேதராக சிறப்பு புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !