சொல்லின் செல்வர் என்று அனுமனைப் புகழ்வது ஏன்?
ADDED :2822 days ago
சீதையை என்று ஆரம்பித்தால் கூட சீதைக்கு என்ன ஆனதோ? என்று ராமன் பயந்துபோவார் என எண்ணி, கண்டேன் சீதையை என்றார் சொல்லின் செல்வர் ஆஞ்சநேயர். இதனை ராமாயணத்தில் கண்டனன் கற்பினுக்கு அணியை கண்களால் என கம்பர் வர்ணிப்பர். இந்த சொல் ஒவ்வொன்றுக்கும் ஆன்மிக பேச்சாளர்கள் ஒரு விரிவுரையே நடத்துவர்.