உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆத்மநாத ஸ்வாமி கோவிலில் இன்று திருவாதிரை திருவிழா

ஆத்மநாத ஸ்வாமி கோவிலில் இன்று திருவாதிரை திருவிழா

புதுக்கோட்டை: ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி திருக்கோவிலில் திருவாதிரை திருவிழா இன்று (29ம் தேதி) ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திருக்கோவில்களில் ஒன்று ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி திருக்கோவில். இங்கு சிவபெருமான் மாணிக்கவாசகராக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் மார்கழியில் திருவாதிரை திருவிழா நடப்பது வழக்கம். இந்த ஆண்டு திருவிழா இன்று திருக்கொடியேற்றுடன் ஆரம்பமாகி தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலத்துடன் நடக்கிறது. நாள்தோறும் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் மற்றும் சுவாமி திருவீதி உலா வருதல் போன்ற நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜனவரி 6ம் தேதி காலை 10 மணிக்கு திருத்தேரோட்டம் நடக்கிறது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசிக்கின்றனர். விழா ஏற்பாடுகளை திருவாவடுதுறை ஆதீன நிர்வாகம் செய்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !