உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநியில் பக்தர்கள் காத்திருப்பு

பழநியில் பக்தர்கள் காத்திருப்பு

பழநி:ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பழநி முருகன் கோயிலில் அதிகாலை முதல் குவிந்தபக்தர்கள் இரண்டுமணிநேரம் வரை காத்திருந்து சுவாமிதரிசனம் செய்தனர்.பழநி மலைக்கோயிலுக்கு நேற்று ஞாயிறு விடுமுறை, சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, திருஆவினன்குடிகோயில், அடிவார மண்டபங்களில் ஏராளமான திருமணங்கள் நடந்தது. இதனால் காலைமுதல் குவிந்த பக்தர்கள், புதுமணதம்பதிகள் ’ரோப்கார்’, வின்ச் ஸ்டேசனில் ஒருமணிநேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்தனர். மலைக்கோயில் பொதுதரிசனம் வழியில் இரண்டு மணிநேரம் வரை காத்திருந்து முருகரை தரிசனம் செய்தனர். இதேப்போல தங்கரத புறப்பாட்டை காண ஏராளமான பக்தர்கள் திரண்டனர்.அடிவாரம் ஆண்டவன்பூங்காரோடு, இடும்பன்மலைக்கோயில் ரோடு, ஆகிய இடங்களில் நடைபாதையை ஆக்கிரமித்து தள்ளுவண்டிகள், தரைக்கடைகள் மற்றும் தடைசெய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வாகனஓட்டிகள், சிரமம் ஏற்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !