சோழவந்தான் பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா
ADDED :2793 days ago
சோழவந்தான்: சோழவந்தான் நாடார் தெரு பத்ரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. மார்ச் 20ல் காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. மார்ச் 28ல் பக்தர்கள் நேர்த்தி க்கடன் செலுத்தினர். நேற்று முன்தினம் மார்ச் 29ல் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது. அம்மன் ரிஷப வாக னத்தில் வீதிஉலா வந்தார். ஏற்பாடுகளை விழா குழு நிர்வாகிகள், உறுப்பினர்கள் செய்திருந்தனர்.