உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுகவனேஸ்வரர் கோவிலில் ராஜேஸ்வரி உருவப்படம் திறப்பு

சுகவனேஸ்வரர் கோவிலில் ராஜேஸ்வரி உருவப்படம் திறப்பு

சேலம்: சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி உருவப்படம் திறக்கப்பட்டது. சேலம், பழைய பஸ் ஸ்டாண்ட், சுகவனேஸ்வரர் கோவில் யானை ராஜேஸ்வரி உடல்நலம் பாதிக்கப்பட்டு, கடந்த, 21ல் இறந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு, சுகவனேஸ்வரர் கோவில் பக்தர்கள் சார்பில், யானைக்கு மோட்ச தீபமேற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதில், தீபமேற்றி, சுகவனேஸ்வரர் சுவாமி முன், சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து, அதிகார நந்தி முன், ராஜேஸ்வரியின் உருவப்படம் திறக்கப்பட்டது. அதை பக்தர்கள் பார்வையிட, கோவில் வளாகத்திற்குள் வைக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !