புத்தபூர்ணிமா : திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனிதநீராடல்
ADDED :3020 days ago
அலகாபாத் : சித்ரா பவுர்ணமி தினத்தன்று, புத்தர் ஞானம் பெற்றார். இந்த தினம், புத்த பூர்ணிமா விழாவாக, ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில், புத்த பூர்ணிமா தினத்தை முன்னிட்டு, கங்கை, யமுனை மற்றம் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி வழிபாடு செய்தனர்.