உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில் ரூ.31.30 லட்சம் காணிக்கை

சென்னிமலை முருகன் கோவில் உண்டியலில் ரூ.31.30 லட்சம் காணிக்கை

சென்னிமலை: சென்னிமலை முருகன் கோவில் உண்டியல், நேற்று காலை திறக்கப்பட்டது. இதில், 31 லட்சத்து, 30 ஆயிரத்து, 359 ரூபாயை, பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். சென்னிமலை முருகன் கோவில் உண்டியல், கடந்த மூன்று மாதங்களுக்கு பின், நேற்று காலை பக்தர்கள் காணிக்கை செலுத்தியிருந்ததை திறந்து எண்ணினர். அதில், நிரந்தர உண்டியல் ஏழு மற்றும் தற்காலிக உண்டியல் இரண்டு என, ஒன்பது உண்டியலில், 29 லட்சத்து, 84 ஆயிரத்து, 725 ரூபாய் இருந்தது. மேலும் தங்கம், 160 கிராம், வெள்ளி, 1,800 கிராம் இருந்தது. திருப்பணி உண்டியலில் ரொக்கம், ஒரு லட்சத்து, 45 ஆயிரத்து, 634 ரூபாய் இருந்தது. மொத்தமாக, 31 லட்சத்து, 30 ஆயிரத்து, 359 ரூபாய் இருந்தது. உண்டியல் திறப்பில் பண்ணாரி கோவில் துணை ஆணையர் பழனிக்குமார், தக்கார் ஹர்சினி, கோவில் செயல் அலுவலர் அருள்குமார், ஆய்வாளர் கமலா, ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் மற்றும் திருப்பூர் மஹாவிஷ்ணு சேவாசங்கத்தினர், நந்தா பொறியியல் கல்லூரி மாணவர்கள் பணம் எண்ணிக்கையில் உதவி புரிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !