உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தர்மபுரி கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை

தர்மபுரி கால பைரவர் கோவில்களில் சிறப்பு பூஜை

தர்மபுரி: சித்திரை மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில், காலபைரவர் கோவிலில், சிறப்பு பூஜைகள் மற்றும் அபி?ஷகங்கள் நடந்தன.

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை தட்சணகாசி காலபைரவர் கோவிலுக்கு, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர். பின், சாம்பல் பூசணியில், தீபமேற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர். முன்னதாக, காலை, 6:00 மணிக்கு, காலபைரவருக்கு அஷ்டபைரவ யாகம், அஷ்டலஷ்மி யாகம், தனகார்சன குபேரயாகம், அதிருந்ர யாகம் உள்ளிட்ட யாகங்கள் நடந்தன. தொடர்ந்து, 64 வகையான அபி?ஷகங்கள், 1,008 அர்ச்சனை மற்றும் 28 ஆகம பூஜைகள் நடந்தன. நேற்று நள்ளிரவு, 12:00 மணிக்கு, 1,008 கிலோ மிளகாய் வற்றல் கொண்டு, சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.

* கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள, கால பைரவர் கோவில்களில், சிறப்பு வழிபாடுகள் நடந்தன. கல்லுகுறுக்கி பெரியஏரி அருகே உள்ள, கால பைரவர் கோவிலில், பூசணி மற்றும் தேங்காயில் விளக்கேற்றி பக்தர்கள் வழிபட்டனர். போச்சம்பள்ளி அருகே உள்ள அண்ணாமலைபுதூர் மல்லிக்கல் கிராமத்தில், 700 ஆண்டுகள் பழமையான காலபைரவர் கோவிலில், சிறப்பு வழிபாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !