குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகா நதிக்கரையில் உள்ள, கெங்கைய ம்மன் கோவில், சிரசு திருவிழா, நேற்று (மே 15)ல் கோலாகலமாக நடந்தது. விஷ்ணுவின்
அம்சமான, பரசுராமன், தனது தாயின் தலையை வெட்டி, மீண்டும் உயிர்ப்பித்த புராண கதையை நினைவு கூறும் வகையில், ஆண்டுதோறும் வேலூர் மாவட்டம், குடியாத்தம், கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதிக் கரையில், கெங்கையம்மன் சிரசு திருவிழா
கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதைமுன்னிட்டு, நேற்று (மே15)ல் காலை, 5:00 மணிக்கு, தரணம்பேட்டையில் உள்ள, முத்தியாலம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள், பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகளுடன், அம்மன் சிரசுவை ஊர்வலமாக எடுத்து, கெங்கையம்மன் கோவிலை சென்றடைந்தனர். இதைக்காண, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட, பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்திருந்தனர்.
கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் அலங்கரிக்கப் பட்டிருந்த, சண்டாளச்சி உடலில், அம்மன் சிரசு பொருத்தப்பட்டது. தொடர்ந்து, கண் திறப்பு நிகழ்ச்சியும் நடந்தது.
இரவு, 8:00 மணிக்கு, அம்மன் சிரசு, சுண்ணாம்புபேட்டையில் உள்ள புங்கனூர் அம்மன் கோவிலுக்கு, ஊர்வலமாக கொண்டு செல்லப் பட்டது. மேலும், கவுண்டன்ய மகாநதியாற்றில் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.