மயிலத்தில் முருகர் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழா
மயிலம்:மயிலம் முருகர் கோவிலில் வைகாசி மாத கிருத்திகை விழா நடந்தது.மயிலம் வள்ளி, தெய்வானை சமேத சுப்பரமணியர் சுவாமி கோவிலில், வைகாசி மாத கிருத்திகை விழா நடந்தது.
நேற்று (மே 15)ல் காலை 6:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. முற்பகல் 11:00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள விநாயகர், பாலசித்தர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமிக்கு பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களினால் அபிஷேகம் நடந்தது.
பின்னர் மூலவர் தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பிற்பகல் 1:00 மணிக்கு கோவில் மண்டபத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 9:00 மணிக்கு
உற்சவர் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.விழா ஏற்பாடுகளை, மயிலம் பொம்மபுர ஆதினம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்திருந்தார்.