வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா துவக்கம்
ADDED :2719 days ago
புதுச்சேரி: வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. புதுச்சேரி காந்தி வீதியில் உள்ள வரதராஜப் பெருமாள்கோவிலின், 32ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7:00 மணி முதல் 9:30 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. இரவு ஹம்ச வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. பிரம்மோற்சவ விழாவையொட்டி தினந்தோறும் சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. இன்று, 22ம் தேதி சூர்ய பிரபை வாகனத்திலும், நாளை 23ம் தேதி யாளி வாகனம், 24ம் தேதி பல்லக்கு வாகனத்தில் வேணுகோபாலன் திருக்கோலமும், 25ம் தேதி மோகனாவதாரம், 26ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. முக்கிய விழாவான தேர்த் திருவிழா 29ம் தேதி நடக்கிறது. 30ம் தேதி 108 கால திருமஞ்சனம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.