தோணிமலை முருகன் கோயிலில் வைகாசி விசாகம்
ADDED :2720 days ago
கன்னிவாடி : வைகாசி விசாகத்தை முன்னிட்டு தோணிமலை முருகன் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. சந்தனம், பால், பஞ்சாமிர்தம், தயிர், பன்னீர், இளநீர் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள், வழிபாடு செய்தனர். கசவனம்பட்டி மவுனகுரு சுவாமி கோயிலில், மூலவர், உற்சவர், நந்திக்கு 30 வகை அபிஷேகம் நடந்தது. உற்ஸவருக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது. தேவார, திருவாசக பாராயணத்துடன் அன்னதானம் நடந்தது. தருமத்துப்பட்டி சுப்பிரமணியசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயிலில், விசஷே அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.