உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பறவை அலகு குத்தி பக்தர்கள் பரவசம்

கரூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பறவை அலகு குத்தி பக்தர்கள் பரவசம்

கரூர்: கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி பெரு விழாவையொட்டி, இன்று மாலை, கம்பம் ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழா, கடந்த, 13ல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. பூச்சொரிதல், காப்பு கட்டுதல், மகாசண்டி யாகம், மறுகாப்பு, தேரோட்டம் என, திருவிழா நிகழ்ச்சிகள் தினமும் நடந்தன. திருவிழாவின் இரண்டாவது நாளான நேற்று காலை முதல், அமராவதி ஆற்றிலிருந்து, பக்தர்கள் பறவை அலகு குத்தி பொக்லைன் இயந்திரத்தில் தொங்கியவாறு, கோவிலுக்கு ஊர்வலமாக சென்றனர். ஏராளமான பக்தர்கள் அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக இன்று மாலை, 5:15 மணிக்கு, கோவிலில் இருந்து கம்பம் அமராவதி ஆற்றுக்கு செல்லும் நிகழ்ச்சி நடக்க உள்ளது. அதை தொடர்ந்து ஆற்றில் பல்வேறு அமைப்புகள் சார்பில் வாண வேடிக்கை நடக்கிறது. அதையொட்டி, மாரியம்மன் கோவில் மற்றும் அமராவதி ஆற்றுக்கு செல்லும் சாலைகளில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !