விரதநாட்களில் இரவில் சாப்பிடக்கூடாது என்பது ஏன்?
ADDED :2709 days ago
விரதநாளில் ஒருவேளை சாப்பாடு சாப்பிடுவதே சரி. உடலும், உள்ளமும்கடவுளையே சிந்திக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம். சிலர் உடல்நிலையைப் பொறுத்து, காலை, இரவில் கொஞ்சம் பால், பழம் சாப்பிட்டுக் கொள்வது உண்டு. விரதநாளில் பல்ஆகார்(பழ உணவு) சாப்பிடலாம் என்றிருந்த வழக்கமே, நாளடைவில் பலகாரம்(இட்லி, தோசை) என திரிந்து விட்டது.