மானாமதுரை மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
ADDED :2693 days ago
மானாமதுரை: மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளம் கேட்டவரம் தரும் மாரியம்மன் கோயி லில் 7 ம்ஆண்டு வருஷாபிஷேக விழாவை முன்னிட்டு கோயில் முன் யாக சாலைகள் அமைக் கப்பட்டு கடங்களில் புனிதநீர் நிரப்பப்பட்டு பூர்ணாகுதி பூஜைக்கு பின் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அபிஷேகம் செய்தனர். அம்மனு க்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளும், தீபஆராதனைகளும் நடைபெற்றன.