உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பண்ணாரியம்மன் கோவிலில் ரூ.52.33 லட்சம் காணிக்கை

பண்ணாரியம்மன் கோவிலில் ரூ.52.33 லட்சம் காணிக்கை

சத்தியமங்கலம்: சத்தியமங்கலத்தை அடுத்த, பண்ணாரியம்மன் கோவிலில், மாதம் ஒருமுறை உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்படுவது வழக்கம். இதன்படி, இந்து சமய அறநிலையத்துறை திருப்பூர் உதவி ஆணையர் ஹர்சினி, கோயில் துணை ஆணையர் பழனிக்குமார், கோவில் பரம்பரை அறங்காவலர் முன், 20 உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. வங்கி ஊழியர்கள், கோவில் பணியாளர்கள், சத்தியமங்கலம் தனியார் கல்லூரி மாணவ, மாணவியர், காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 52 லட்சத்து, 33 ஆயிரம் ரூபாய், 391 கிராம் தங்கம், 1,182 கிராம் வெள்ளி கிடைத்ததாக, அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !