மேலும் செய்திகள்
திருக்கோவிலூர் ஞானானந்தா தபோவனத்தில் நவராத்திரி விழா
5000 days ago
பிரம்மாகுமாரிகள் ராஜயோக நிலையத்தில் சிறப்பு தியானம்
5000 days ago
51. வேய்ங் குழல் ராகம்-ஹிந்துஸ்தான் தோடி தாளம்-ஏகதாளம் எங்கிருந்து வருகுவதோ?-ஒலியாவர் செய்குவ தோ?-அடி தோழி! குன்றி னின்றும் வருகுவதோ?-மரக்கொம்பி னின்றும் வருகுவதோ?-வெளிமன்றி னின்று வருகுவதோ?-என்தன்மதி மருண்டிடச் செய்குதடி-இஃது, (எங்கிருந்து) அலையொ லித்திடும் தெய்வ-யமுனையாறி னின்றும் ஒலுப்பதுவோ?-அன்றிஇலையொ லிகும் பொழிலிடை நின்றும்எழுவதோ இஃதின்ன முதைப்போல்? (எங்கிருந்து) காட்டி னின்றும் வருகுவதோ?-நிலாக்காற்றிக் கொண்டு தருகுவதோ?-வெளிநாட்டி னின்றுமித் தென்றல் கொணர்வதோ?நாதமிஃதென் உயிரை யுருக்குதே! (எங்கிருந்து) பறவை யேதுமொன் றுள்ளதுவோ!-இங்ஙன்பாடுமோ அமுதக்கனற் பாட்டு?மறைவினிறுங் கின்னர ராதியர்வாத்தியதினிசை யிதுவோ அடி! (எங்கிருந்து) கண்ண னூதிடும் வேய்ங்குழல தானடீ!காதி லேயமு துள்ளத்தில் நஞ்சு,பண்ணன் றாமடி பாவையர் வாடப்பாடி யெய்திடும் அம்படி தோழி! (எங்கிருந்து) 52. கண்ணம்மாவின் காதல் காற்று வெளியிடைக் கண்ணம்மா!-நின்தன்காதலை யெண்ணிக் களிக்கின்றேன்;-அமுதூற்றினை யொத்த இதழ்களும்-நிலவூறித் ததும்பும் விழிகளும்-பத்துமாற்றுப்பொன் னொத்தநின் மேனிம்-இந்தவையத்தில் யானுள்ள மட்டிலும்-எனைவேற்று நினைவின்றித் தேற்றியே-இங்கொர்விண்ணவ னாகப் புரியுமே!-இந்தக் (காற்று வெளி) நீயென தின்னுயிர் கண்ணம்மா!-எந்தநேரமும் நின்தன்ப் போற்றுவேன்-தயர்போயின போயின துன்பங்கள்-நினைப்பொன்னெனக் கொண்ட பொழுதிலே-என்தன்வாயினி லேயமு தூறுதே-கண்ணம்மாவென் றபேர்சொல்லும் போழ்திலே-உயிர்த்தீயினி லேவளர் சோதியே!-என்தன்சிந்தனையே என்தன் சித்தமே!-இந்தக் (காற்று வெளி) 53. கண்ணம்மாவின் நினைப்பு பல்லவிநின்னை யே ரதியென்று நினைக்கிறேனடி-கண்ணம்மா!தன்னையே சகியென்று சரணமெய்தினேன்! (நின்) சரணங்கள் பொன்னை யே நிகர்த்த மேனி மின்னை ய, நிகர்த்த சாயற்பின்னை யே!-நித்ய கன்னியே! கண்ணம்மா! (நின்) மார னம்புக ளென்மீது வாரி வாரி வீச நீ-கண்பாரா யோ? வந்த சேரா யோ? கண்ணம்மா? (நின்) யாவு மே சுக முனிக் கொர் ஈசனா னெக்குன் தோற்றம்மேவு மே-இங்கு யாவு மே,கண்ணம்மா! (நின்) 54. மனப் பீடம் பல்லவிபீடத்தி லேறிக் கொண்டாள்-மனப்பீடத்தி லேறிக் கொண்டாள். சரணங்கள்நாடித் தவம் புரிந்து பீடுற்ற முனிவரர்கேடற்ற தென்று கண்டு கூடக் கருது மொளிமாடத்தி லேறி ஞானக்ச கூடத்தில் விளையாடிஓடத் திருந்து கன்னி வேடத்தி ரதியைப்போல்,ஈடற்ற கற்பனைகள் காடுற்ற சிந்தனைகள்மூடிக் கிடக்கு நெஞ்சின் ஊடுற் றதை யமரர்தேடித் தவிக்கு மின்ப வீடொத் தினிமைசெய்துவேடத்தி சிறுவள்ளி வித்தையென் கண்ணம்மா (பீடத்தி) கண்ணன் திருமார்பிற் கலந்த கமலை யென்கோ?விண்ணவர் தொழுதிடும் வீரச் சிங்காதனத்தேநண்ணிச் சிவனுடலை நாடுமவ ளென்கோ?எண்ணத்துதிக்குதடா இவள்பொன் னுடலமுதம்!பெண்ணி லரசியிவள் பெரிய எரி லுடையாள்கண்ணுள் கணியெனக்குக் காத லிரதியிவள்பண்ணி லினிய சுவை பரந்த மொழியினாள்உண்ணு மிதழமுற ஊற்றினள் கண்ணம்மா (பீடத்தி) 55. கண்ணம்மாவின் எழில் ராகம்-செஞ்சுருட்டி தாளம்-ரூபகம் பல்லவிஎங்கள் கண்ணம்மா நகை புது ரோஜாப் பூ;எங்கள் கண்ணம்மா விழி இந்த்ர நீலப் பூ!எங்கள் கண்ணம்மா முகஞ் செந்தாமரைப் பூ;எங்கள் கண்ணம்மா நுதல் பால சூர்யன். சரணங்கள் எங்கள் கண்ணம்மா எழில் மின்னலை நேர்க்கும்;எங்கள் கண்ணம்மா புருவங்கள் மதன் விற்கள்;திங்களை மடிய பாம்பினைப் போலேசெறிகுழல்,இவள் நாசி எட் பூ (எங்கள்) மங்கள வாக்கு நித்யானந்த ஊற்று;மதரு வாய் அமிர்தம்;இத ழமிர் தம்;சங்கீத மென் குரல் சரஸ்வதி வீணைசாய லரம்பை; சதுர் அயிராணி. (எங்கள்) இங்கித நாத நிலைய மிருசெவிசங்கு நிகர்த்த கண்டம் அமிர்த சங்கம்;மங்களக் கைகள் மஹர் சக்தி வாசம்;வயி ராலிலை,இடை அமிர்த வீடு. (எங்கள்) சங்கரனைத் தாங்கு நந்தி பத சதுரம்;தாமரை யிருதாள் லக்ஷ்மீ பீடம்;பொங்கித் ததும்பித் திசை யெங்கும் பாயும்புத்தன்பும் ஞானமும் மெய்த்திருக் கோலம் (எங்கள்) 56. திருக் காதல் திருவே! நினைக்காதல்கொண் டேனே-நினது திருவுருவே மறவாதிருந் தேனே-பல திசையில்தேடித் திரிந்நிளைத் தேனே-நினக்கு மனம்வாடித் தினங்களைதேனே-அடி,நினதுபருவம் பொறுத்திருந் தேனே-மிகவும் நம்பிக்கருவம் படைத்திருந்தேனே-இடை நடுவில்பையச் சதிகள்செய் தாயே-அதனிலுமென்மையல் வளர்தல்கண் நல் காயே-நினதருளில்உய்யக் கருணைசெய் வாயே-பெருமைகொண்டுவையந் தழைக்கவைப் பேனே-அமரயுகஞ்செய்யத் துணிந்துநிற் பேனே-அடியெனதுதேனே! என திரு கண்ணே!-எனையுகந்துதானே வருந் திருப்-பெண்ணே! 57. திருவேட்கை ராகம்-நாட்டை தாளம்-சதுஸ்ர ஏகம் மலரின் மேவு திருவே!-உன் மேல்யைல் பொங்கி நின்றேன்;நிலவு செய்யும் முகமும்-காண்பார்நினைவ ழிக்கும் விழியும்,கலக லென்ற மொழியும்-தெய்வக்களிது லங்கு நகையும்,இலகு செல்வ வடிவும்-கண்டுன்இன்பம் வேண்டு கின்றேன் 1 கமல மேவு திருவே!-நின்மேல்காதலாகி நின்றேன்.குமரி நின்னை இங்கே-பெற்றோர்கோடி யின்ப முற்றார்;அமரர் போல வாழ்வேன்,-என்மேல்அன்பு கொள்வை யாயின்இமமய வெற்பின் மோத,-நின்மேல்இசைகள் பாடி வாழ்வேன். 2 வாணி தன்னை என்றும்-நினதுவரிசை பாட வைப்பேன்!நாணி யேக லாமோ?-என்னைநன்க றிந்தி லாயோ?பேணி வைய மெல்லாம்-நன்மைபெருக வைக்கும் விரதம்பூணு மைந்த ரெல்லாம்-கண்ணன்பொறிக ளாவ ரன்றோ? 3 பொன்னும் நல்ல மணியும்-சுடர்செய்பூண்க ளேந்தி வந்தாய்!மின்னு நின்தன் வடிவிற்-பணிகள்மேவி நிற்கும் அழகைஎன்னு ரைப்ப னேடீ!-திருவே!என்னு யிக்கொ ரமுதே!நின்னை மார்பு சேரத்-தழுவிநிக ரிலாது வாழ்வேன். 4 செல்வ மெட்டு மெய்தி-நின்னாற்செம்மை யேறி வாழ்வேன்;இல்லை என்ற கொடுமை-உலகில்இல்லை யாக வைப்பேன்;முல்லை போன்ற முறுவல்-காட்டிமோக வாதை நீக்கி,எல்லை யற்ற சுவையே!-எனை நீஎன்றும் வாழ வைப்பாய். 5 58. திருமகள் துதி ராகம்-சக்கரவாகம் தாளம்-திஸ்ரஏகம் நித்தமுனை வேண்டி மனம்நினைப்ப தெல்லாம் நீயாய்ப்பித்தனைப்போல் வாழ்வதிலேபெருமையுண்டோ? திருவே!சித்தவுறுதி கொண்டிருந்தார்செய்கை யெல்லாம் வெற்றி கொண்டேஉத்தமநிலை சேர்வ ரென்றேஉயர்ந்த வேதமுரைப்ப தெல்லாம்,சுத்த வெறும் பொய்யோடீ?சுடர் மணியே!திருவே!மெத்த மையல் கொண்டு விட்டேன்மேவிடுவாய்,திருவே! 1 உன்னையன்றி இன்ப முண்டோஉலகமிசை வேறே!பொன்னை வடிவென் றுடையாய்புத்தமுதே,திருவே!மின்னொளி தருநன் மணிகள்மேடை யுயர்ந்த மாளிகைகள்வன்ன முடைய தாமரைப் பூமணிக்குள முள்ள சோலைகளும்,அன்ன நறு நெய் பாலும்அதிசயமாத் தருவாய்!நின்னருளை வாழ்த்தி என்றும்நிலைத்திருப்பேன்,திருவே! 2 ஆடுகளும் மாடுகளும்அழகுடைய பரியும்வீடுகளும் நெடுநிலமும்விரைவினிலே தருவாய்!ஈடு நினக்கோர் தெய்வமுண்டோ?எனக்குனை யன்றிச் சரணுமுண்டோ?வாடு நிலத்தைக் கண் டிரங்காமழையினைப் போல் உள்ள முண்டோநாடு மணிச் செல்வ மேல்லாம்நன்கருள்வாய், திருவே!பீடுடைய வான் பொருளேபெருங் களியே, திருவே! 3 59. திருமகளைச் சரண் புகுதல் மாதவன் சக்தியினைச்-செய்யமலர்வளர் மணியினை வாழ்த்திடுவோம்;போதுமிவ் வறுமையெலாம்-எந்தப்போதிலுஞ் சிறுமையின் புகைதனிலேவேதனைப் படுமனமும்-உயர்வேதமும் வெறுப்புறச் சோர்மதியும்வாதனை பொறுக்கவில்லை-அன்னைமாமக ளடியிணை சரண் புகுவோம். 1 கீழ்களின் அவமதிப்பும்-தொழில்கெட்டவ னிணக்கமும் கிணற்றினுள்ளேமூழ்கிய விளக்கினைப் போல்-செய்யும்முயற்சியெல் லாங்கெட்ட முடிவதுவும்,ஏழ்கட லோடியுமோர்-பயன்எய்திட வழியின்றி இருப்பதுவும்,வீழ்கஇக்கொடு நோய்தான்-வையமீதினில் வறுமையோர் கொடுமை யன்றோ? 2 பாற்கட லிடைப் பிறந்தாள்-அதுபயந்தநல் லமுதத்தின் பான்மைகொண்டாள்;ஏற்குமோர் தாமரைப்பூ-அதில்இணைமலர்த் திருவடி இசைந்திருப்பாள்;நாற்கரந் தானுடையாள்-அந்தநான்கினும் பலவகைத் திருவுடையாள்;வேற்கரு விழியுடையாள்-செய்யமேனியள் பசுமையை விரும்பிடுவாள். 3 நாரணன் மார்பினிலே-அன்புநலமுற நித்தமும் இணைந்திருப்பாள்;தோரணப் பந்தரிலும்-பசுத்தொழுவிலும் சுடர்மணி மாடத்திலும்,வீரர்தந் தோளினிலும்-உடல்வெயர்திட உழைப்பவர் தொழில்களிலம்பாரதி சிரத்தினிலும்-ஒளிபரவிட வீற்றிருந் தருள் புரிவாள். 4 பொன்னிலும் மணிகளிலும் -நறும்பூவிலும் சாந்திலும் விளக்கினிலும்,கன்னியர் நகைப்பினிலும்-செழுங்காட்டிலும் பொழிலிலம் கழனியிலம்,முன்னிய தணிவினிலும்-மன்னர்முகத்திலும் வாழ்ந்திடும் திருமகளைப்பன்னிநற் புகழ்பாடி-அவள்பதமலர் வாழ்த்திநற் பதம்பெறு வோம். 5 மண்ணினுட் கனிகளிலும்-மலைவாய்ப்பிலும் வார்கட லாழத்திலும்,புண்ணிய வேள்வியிலும்-உயர்புகழிலும் மதியிலும் புதுமையிலும்பண்ணுநற் பாவையிலும்-நல்லபாட்டிலும் கூத்திலும் படத்தினிலும்,நண்ணிய தேவிதனை-எங்கள்நாவிலும் மனத்திலும் நாட்டிடுவோம். 6 வெற்றிகொள் படையினிலும்-பலவிநயங்கள் அறிந்தவர் கடையினிலும்நற்றவ நடையினிலும்-நல்நாவலர் தேமொழித் தொடரினிலும்,உற்றசெந் திருத்தாயை-நித்தம்உவகையிற் போற்றியிங் குயர்ந்திடுவோம்;கற்றபல் கலைகளெல்லாம்-அவள்கருணை நல் லொளிபெறக் கலிதவிர்ப்போம். 7 60. ராதைப் பாட்டு ராகம்-கமாஸ் தாளம்-ஆதி பல்லவிதேகி முதம் தேகி ஸ்ரீ ராதே, ராதே! சரணங்கள்ராக ஸமுத்ரஜாம்ருதே ராதே, ராதே!;ராஜ்ஞீ மண்டல ரத்ந ராதே, ராதே!போக ரதி கோடி துல்யே ராதே, ராதே! (ஜய ஜய தேகி)பூதேவி தப; பல ராதே, ராதே!வேத மஹா மந்த்ர ரஸ ராதே, ராதே!வேத வித்யா விலாஸினி ஸ்ரீ ராதே, ராதே!ஆதி பரா சக்தி ரூப ராதே, ராதே!அத் யத்புத ச்ருங்காரமய ராதே, ராதே! (தேகி) தமிழ்க் கண்ணிகள் காதலெனுந் தீவினிலே, ராதே, ராதே!-அன்றுகண்டெடுத்த பெண்மணியே! ராதே, ராதே! (தேகி) காதலெனுஞ் சோலையிலே ராதே, ராதே!-நின்றகற்பகமாம் பூந் தருவே ராதே, ராதே! (தேகி) மாதரசே!செல்வப் பெண்ணே, ராதே, ராதே!-உயர்வானவர்க ளின்ப வாழ்வே ராதே, ராதே! (தேகி) 61. கலைமகளை வேண்டுதல் நொண்டிச் சிந்து எங்ஙனம் சென்றிருந்தீர்?-எனதின்னுயிரே!என்தன் இசையமுதே!திங்களைக் கண்டவுடன்-கடல்திரையினைக் காற்றினைக் கேட்டவுடன்கங்குலைப் பார்த்தவுடன்-இங்குகாலையில் இரவியைத் தொழுதவுடன்,பொங்குவீர் அமிழ்தெனவே-அந்தப்புதுமையி லேதுயர் மறந்திருப்பேன். 1 மாதமொர் நான்காய்நீர்-அன்புவறுமையி லேயெனை வீழ்த்திவீட்டீர்;பாதங்கள் போற்றுகின்றேன் என்தன்பாவமெலாங் கெட்டு ஞானகங்கைநாதமொ டெப்பொழுதும்-என்தன்நாவினி லேபொழிந் திடவேண்டும்;வேதங்க ளாக்கிடுவீர்-அந்தவிண்ணவர் கண்ணிடை விளங்கிடுவீர். 2 கண்மணி போன்றவரே!-இங்குக்காலையும் மாலையும் திருமகளாம்பெண்மணி யின்பத்தையும்;-சக்திப்பெருமகள் திருவடிப் பெருமையையும்,வண்மையில் ஓதிடுவீர்!-என்தன்வாயிலும் மதியிலும் வளர்ந்திடுவீர்;அண்மையில் இருந்திடுவீர்!இனிஅடியனைப் பிரிந்திடல் ஆற்றுவனோ! 3 தானெனும் பேய்கெடவே,-பலசஞ்சலக் குரங்குகள் தலைப்படவே,வானெ னும் ஒளி பெறவே,-நல்லவாய்மையி லேமதி நிலைத்திடவே.தேனெனப் பொழிந்திடுவீர்!-அந்தத்திருமகள் சினங்களைத் தீர்த்திடுவீர்!ஊனங்கள் போக்கிடுவீர்!-நல்லஊக்கமும் பெருமையும் உதவிடுவீர்! 4 தீயினை நிறுத்திடுவீர்!-நல்லதீரமுந் தெளிவுமிங் கருள்புரிவீர்!மாயையில் அறிவிழந்தே-உம்மைமதிப்பது மறந்தனன்; பிழைகளெல்லாம்,தாயென உமைப்பணிந்தேன்-பொறைசார்த்திநல் லருள்செய வேண்டுகின்றேன்.வாயினிற் சபத மிட்டேன்;இனிமறக்ககி லேன்.எனை மறக்ககிலீர்! 5 62. வெள்ளைத் தாமரை ராகம்-ஆனந்த பைரவி தாளம்-சாப்பு 1. வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;கொள்ளை யின்பம் குலவு கவிதைகூறு பாவலர் உள்ளத் திருப்பாள்;உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தேஓதும் வேதத்தின் உள்நின் றொளிர்வாள்;கள்ள முற்ற முனிவர்கள் கூறும்கருணை வாசக்த் துட்பொரு ளாவாள். (வெள்ளைத்) 2. மாதர் தீங்குரற் பாட்டில் இருப்பாள்,மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;கீதம் பாடும் குயிலின் குரலைக்கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;கோத கன்ற தொழிலுடைத் தாகிக்குலவு சித்திரம் கோபுரம் கோயில்ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்இன்ப மேவடி வாகிடப் பெற்றாள். (வெள்ளைத்) 3. வஞ்ச மற்ற தொழில்புரிந் துண்டுவாழும் மாந்தர் குலதெய்வ மாவாள்;வெஞ்ச மர்க்குயி ராகிய கொல்லர்வித்தை யோர்ந்திடு சிற்பியர்,தச்சர்,மிஞ்ச நற்பொருள் வாணிகஞ் செய்வோர்,வீர மன்னர்பின் வேதியர் யாரும்தஞ்ச மென்று வணங்கிடுந் தெய்வம்தரணி மீதறி வாகிய தெய்வம். (வெள்ளைத்) 4. தெய்வம் யாவும் உணர்ந்திடுந் தெய்வம்,தீமைகாட்டி விலக்கிடுந் தெய்வம்;உய்வ மென்ற கருத்துடை யோர்கள்உயிரி னுக்குயி ராகிய தெய்வம்;செய்வ மென்றொரு செய்கை யெடுப்போர்செம்மை நாடிப் பணிந்திடு தெய்வம்கைவ ருந்தி உழைப்பவர் தெய்வம்கவிஞர் தெய்வம்,கடவுளர் தெய்வம் (வெள்ளைத்) 5. செந்த மிழ்மணி நாட்டிடை யுள்ளீர்!சேர்ந்தித் தேவை வணங்குவம் வாரீர்!வந்த னம்இவட் கேசெய்வ தென்றால்வாழி யஃதிங் கெளிதன்று கண்டீர்!மந்தி ரத்தை முணுமுணுத் தேட்டைவரிசை யாக அடுக்கி அதன்மேல்சந்த னத்தை மலரை இடுவோர்சாத்திரம் இவள் பூசனை யன்றாம். (வெள்ளைத்) 6. வீடு தோறும் கலையின் விளக்கம்,வீதி தோறும் இரண்டொரு பள்ளி;நாடு முற்றிலும் உள்ளவ வூர்கள்நகர்க ளெங்கும் பலபல பள்ளி;தேடு கல்வியி லாததொ ரூரைத்தீயி னுக்கிரை யாக மடுத்தல்கேடு தீர்க்கும் அமுதமென் அனனைகேண்மை கொள்ள வழியிவை கண்டீர், (வெள்ளைத்) 7. ஊணர் தேசம் யவனர்தந் தேசம்உதய ஞாயிற் றொளிபெறு நாடு;சேண கன் றதோர் சிற்றடிச் சீனம்செல்வப் பார சிகப்பழந் தேசம்தோண லத்த துருக்கம் மிசிரம்சூழ்க டற்கப் புறத்தினில் இன்னும்காணும் பற்பல நாட்டிடை யெல்லாம்கல்வித் தேவின் ஒளிமிகுந்தோங்க. (வெள்ளைத்) 8. ஞானம் என்பதோர் சொல்லின் பொருளாம்நல்ல பாரத நாட்டை வந்தீர்!ஊனம் இன்று பெரிதிழைக் கின்றீர்!ஓங்கு கல்வி யுழைப்பை மறந்தீர்!மான மற்று விலங்குக ளொப்பமண்ணில் வாழ்வதை வாழ்வென லாமோ?போன தற்கு வருந்துதல் வேண்டாபுன்மை தீர்ப்ப முயலுவம் வாரீர்! (வெள்ளைத்) 9. இன்ன றுங்கனிச் சோலைகள் செய்தல்அனிய நீர்த்தண் சுனைகள் இயற்றல்;அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்ஆல யம்பதி னாயிரம் நாட்டல்.பின்ன ருள்ள தருமங்கள் யாவும்பெயர்வி ளங்கி யொளிர நிறுத்தல்,அன்ன யாவினும் புண்ணியம் கோடிஆங்கோர் ஏழைக் கெழுத்தறி வித்தல் (வெள்ளைத்) 10. நிதிமி குத்தவர் பொற்குவை தாரீர்!நிதிகு றைந்தவர் காசுகள் தாரீர்!அதுவு மற்றவர் வாய்ச்சொல் அருளீர்!ஆண்மை யாளர் உழைப்பினை நல்கீர்!மதுரத் தேமொழி மாதர்க ளெல்லாம்வாணி பூசைக் குரியன பேசீர்!எதுவும் நல்கியிங் வ்வகை யானும்இப்பெருந் தொழில நாட்டுவம் வாரீர்! (வெள்ளைத்) 63. நவராத்திரிப் பாட்டு(மாதா பராசக்தி) பரா சக்தி(மூன்றும் ஒன்றாகிய மூர்த்தி) மாதா பராசக்தி வையமெலாம் நீ நிறைந்தாய்?ஆதாரம் உன்னையல்லால் ஆரெமக்குப் பாரினிலே?ஏதாயினும் வழிநீ சொல்வாய் எமதுயிரே!வேதாவின் தாயே! மிகப்பணிந்து வாழ்வோமே 1 வாணி வாணி கலைத்தெய்வம் மணிவாக் குதவிடுவாள்ஆணிமுத்தைப் போலே அறிவுமுத்து மாலையினாள்காணுகின்ற காட்சியாய்க் காண்பதெலாங் காட்டுவதாய்மாணுயர்ந்து நிற்பாள் மலரடியே சூழ்வோமே. 2 ஸ்ரீதேவி பொன்னரசி நாரணனார் தேவி,புகழரசிமின்னுநவ ரத்தினம்போல் மேனி யழகுடையாள்.அன்னையவள் வையமெலாம் ஆதரிப்பாள்,ஸ்ரீதேவிதன்னிரு பொற்றாளே சரண்புகுந்து வாழ்வோமே. 3 பார்வதி மலையிலே தான்பிறந்தாள்,சங்கரனை மாலையிட்டாள்,உலையிலே யூதி உலகக் கனல்வளர்ப்பாள்,நிலையில் உயர்ந்திடுவாள்,நேரே அவள்பாதம்தலையிலே தாங்கித் தரணிமிசை வாழ்வோமே. 4 64. மூன்று காதல் முதலாவது-சரஸ்வதி காதல் ராகம்-சரஸ்வதி மனோஹரி தாளம்-திஸ்ர ஏகம் பிள்ளைப் பிராயத்திலே-அவள்பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்குபள்ளிப் படிப்பினிலே-மதிபற்றிட வில்லை யெனிலுந் தனிப்படவெள்ளை மலரணமேல்-அவள்ணையுங் கையும் விரிந்த முகமலர்விள்ளும் பொருளமுதும்-கண்டேன்வெள்ளை மனது பறிகொடுத் தேன், அம்மா! 1 ஆடி வருகையிலே-அவள்அங்கொரு வீதி முனையில் நிற்பாள்;கையில்ஏடு தரித்திருப்பாள்-அதில்இங்கித மாகப் பதம் படிப்பாள், அதைநாடி யருகணைந்தால்-பலஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்:”இன்றுகூடி மகிழ்வ” மென்றால்-விழிக்கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள்,அம்மா! 2 ஆற்றங் கரைதனிலே-தனியானதோர் மண்டப மீதினிலே,தென்றற்காற்றை நுகர்ந்திருந்தேன்-அங்குகன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்;அதைஏற்று மனமகிழ்ந்தே-’ அடிஎன்னோ டிணங்கி மணம்புரி வாய்” என்றுபோற்றிய போதினிலே-இளம்புன்னகை பூத்து மறைந்துவிட்டாள்,அம்மா! 3 சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத்தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொருபித்துப் பிடித்ததுபோல-பகற்பேச்சும் இரவிற் கனவும் அவளிடைவைத்த நினைவை யல்லால்-பிறவாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிருபத்திரண் டாமளவும்-வெள்ளைப்பண்மகள் காதலைப் பற்றிநின் றேன்,அம்மா! 4 இரண்டாவது-லக்ஷ்மி காதல் ராகம்-ஸ்ரீராகம் தாளம்-திஸ்ர ஏகம் இந்த நிலையினிலே,அங்கொர்இன்பப் பொழிலி னிடையினில் வேறொருசுந்தரி வந்துநின்றாள்-அவள்சோதி முகத்தின் அழகினைக் கண்டென்தன்சிந்தை திறைகொடுத்தேன்-அவள்செந்திரு வென்று பெயர்சொல்லி னாள்;மற்றும்அந்தத் தினமுதலா-நெஞ்சம்ஆரத் தழுவிட வேண்டுகின் றேன்,அம்மா! புன்னகை செய்திடுவாள்-அற்றைப்போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்;சற்றென்முன்னின்று பார்த்திடுவாள்-அந்தமோகத்தி லேதலை சுற்றிடுங் காண்;பின்னர்என்ன பிழைகள் கண்டோ-அவள்என்னைப் புறக்கணித் தேகிடு வாள்;அங்குசின்னமும் பின்னமுமா-மனஞ்சிந்தி யுளமிக நைந்திடு வேன்,அம்மா! காட்டு வழிகளிலே-மலைக்காட்சியிலே,புனல் வீழ்ச்சி யிலே,பலநாட்டுப் புறங்களிலே-நகர்நண்ணு சிலசுடர் மாடத்தி லே,சிலவேட்டுவர் சார்பினிலே-சிலவீர ரிடத்திலும் வேந்த ரிடத்திலும்,மீட்டு மவள்வருவாள்-கண்டவிந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம்,அம்மா! மூன்றாவது-காளி காதல் ராகம்-புன்னகவராளி தாளம்-திஸ்ர ஏகம் பின்னோர் இராவினிலே-கரும்பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;கன்னி வடிவமென்றே-களிகண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்அன்னை வடிவமடா!-இவள்ஆதி பராசக்தி தேவி யடா!-இவள்இன்னருள் வேண்டுமடா!-பின்னர்யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!செல்வங்கள் பொங்கிவரும்;-நல்லதெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;அல்லும் பகலுமிங்கே இவைஅத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்றுவிலலை யசைப்பவளை-இந்தவேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்தொல்லை தவிர்ப்பவளை-நித்தம்தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா! 65. ஆறு துணை ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்-பரா சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம்ஓம் சக்தி ஓம் சக்தி ஓம் சக்தி -ஓம் சக்திஓம் சக்தி ஓம் சக்தி ஓம் கணபதி ராயன்-அவனிருகாலைப் பிடித் திடுவோம்;குண முயர்ந் திடவே-விடுதலைகூடி மகிழ்ந்திடவே (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) சொல்லுக் கடங்காவே-பரா சக்திசூரத் தனங்க ளெல்லாம்;வல்லமை தந்திடுவாள்-பரா சக்திவாழியென்றேதுதிப்போம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) வெற்றி வடிவேலன்-அவனுடைவீரத்தினைப் புகழ்வோம்சுற்றி நில்லாதே போ!-பகையே!துள்ளி வருகுது வேல். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) தாமரைப் பூவினிலே-சுருதியைத்தனியிருந் துரைப்பாள்பூமணித் தாளினையே-கண்ணி லொற்றிப்புண்ணிய மெய்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) பாம்புத் தலைமேலே-நடஞ் செயும்பாதத்தினைப் புகழ்வோம்;மாம்பழ வாயினிலே-குழலிசைவண்மை புகழ்ந்திடுவோம். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) செல்வத் திருமகளைத்-திடங்கொண்டுசிந்தனை செய்திடுவோம்;செல்வமெல்லாம் தருவாள்-நமதொளிதிக்க னைத்தும் பரவும். (ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்) 66. விடுதலை வெண்பா சக்தி பதமே சரணென்று நாம்புகுந்துபக்தியினாற் பாடிப் பலகாலும்-முக்தி நிலைகாண்போம் அதனாற் கவலைப் பிணிதீர்ந்துபூண்போம் அமரப் பொறி. 1 பொறிசிந்தும் வெங்கனல்போற் பொய்தீர்ந்து தெய்வவெறிகொண்டால் ஆங்கதுவே வீடாம்-நெறிகொண்டவையமெலாந் தெய்வ வலியன்றி வேறில்லைஐயமெலாந் திர்ந்த தறிவு. 2 அறிவிலே தோன்றில் அவனியிலே தோன்றும்,வறிஞராய்ப் பூமியிலே வாழ்வீர்!-குறிகண்டுசெல்வமெலாம் பெற்றுச் சிறப்புறவே சக்திதரும்வெல்வயிரச் சீர்மிகுந்த வேல். 3 வேலைப் பணிந்தால் விடுதலையாம்;வேல் முருகன்காலைப் பணிந்தால் கவலைபோம்-மேலறிவுதன்னாலே தான்பெற்று சக்தி சக்தி சக்தியென்றுசொன்னால் அதுவே சுகம். 4 சுகத்தினைநான் வேண்டித் தொழுவேன் எப்போதும்அகத்தினிலே துன்பற் றழுதேன்-யுகத்தினிலோர்மாறுதலைக் காட்டி வலிமை நெறிகாட்டிஅறுதலைத் தந்தாள் அவள். 5 67. ஐயம் உண்டு ராகம்-கமாஸ் (தாளம்-ஆதி) பல்லவிஜயமுண்டு பயமில்லை மனமே!-இந்தஜன்மத்திலே விடுதலையுண்டு நிலையுண்டு. (ஜய) அனுபல்லவிபயனுண்டு பக்தியினாலே-நெஞ்சிற்பதிவுற்றற குலசக்தி சரணுண்டு பகையில்லை (ஜய) சரணங்கள்புயமுண்டு குன்றத்தைப் போலே-சக்திபொற்பாத முண்டு அதன் மேலே;நியம மெல்லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;நெறியுண்டு,குறியுண்டு,குலசக்தி வெறியுண்டு (ஜய) மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும்-தெய்வவலியுண்டு தீமையைப் போக்கும்;விதியுண்டு,தொழிலுக்கு விளைவுண்டு,குறைவில்லை;விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு (ஜய) அலைபட்ட கடலுக்கு மேலே-சக்திஅருளென்னுந் தோணியி னாலேதொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய) 68. ஆரிய தரிசனம் (ஓர் கனவு) ராகம்-ஸ்ரீராகம் (தாளம்-ஆதி) கனவென்ன கனவே-என்தன்கண்துயி லாதுநனவினிலே யுற்ற (கன) 1. கானகம் கண்டேன்-அடர்கானகங் கண்டேன்-உச்சிவானகத்தே வட்ட மதியொளி கண்டேன். (கன) 2. பொற்றிருக் குன்றம்-அங்கொர்பொற்றிருக் குன்றம்-அதைச்சுற்றி யிருக்கும் சுனைகளும் பொய்கையும் (கன) புத்த தரிசனம் 3. குன்றத்தின் மீதே-அந்தக்குன்றத்தின் மீதே-தனிநின்றதோர் ஆல நெடுமரங் கண்டேன். (கன) 4. பொன்மரத் தின்கீழ்-அந்தப்பொன்மரத் தின்கீழ்-வெறுஞ்சின்மய மானதோர் தேவன் இருந்தனன். (கன) 5. புத்த பகவன்-எங்கள்புத்த பகவன்-அவன்சுத்தமெய்ஞ் ஞானச் சுடர்முகங் கண்டேன். (கன) 6. காந்தியைப் பார்த்தேன்-அவன்காந்தியைப் பார்த்தேன்-உபசாந்தியில் மூழ்கித் ததும்பிக் குளித்தனன். (கன) 7. ஈதுநல் விந்தை!-என்னை!ஈதுநல் விந்தை!-புத்தன்சோதி மறைந்திருள் துன்னிடக் கண்டனன். (கன) 8. பாய்ந்ததங் கொளியே;-பின்னும்பாய்ந்ததங் கொளியே;-அருள்தேய்ந்த தென்மேனி சிலிர்த்திடக் கண்டேன். (கன) கிருஷ்ணார்ஜுன தரிசனம் 9. குன்றத்தின் மீதே-அந்தக்குன்றத்தின் மீதே-தனிநின்ற பொற்றேரும் பரிகளும் கண்டேன் (கன) 10. தேரின்முன் பாகன்-மணித்தேரின்முன் பாகன்-அவன்சீரினைக் கண்டு திகைத்துநின் றேனிந்தக் (கன) 11. ஓமென்ற மொழியும்-அவன்ஓமென்ற மொழியும்-நீலக்காமன்தன் உருவும்,அவ் வீமனதன் திறலும். (கன) 12. அருள் பொங்கும் விழியும்-தெய்வஅருள் பொங்கும் விழியும்-காணில்இருள் பொங்கு நெஞ்சினர் வெருள் பொங்குந் திகிரியும். (கன) 13. கண்ணனைக் கண்டேன்-எங்கள்கண்ணனைக் கண்டேன்-மணிவண்ணனை ஞான மலையினைக் கண்டேன். (கன) 14. சேனைகள் தோன்றும்-வெள்ளச்சேனைகள் தோன்றும்-பரியானையுந் தேரும் அளவில் தோன்றும். (கன) 15. கண்ணன்நற் றேரில்-நீலக்கண்ணன்நற் றேரில்-மிகஎண்ணயர்ந் தானொர் இளைஞனைக் கண்டேன். (கன) 16. விசையன்கொ லிவனே!-விறல்விசையன்கொ லிவனே!-நனிஇசையும் நன்கிசையும் இங்கிவனுக் கிந்நாமம் (விசை) 17. வீரிய வடிவம்!-என்னவீரிய வடிவம்!-இந்தஆரியன் நெஞ்சம் அயர்ந்ததென் விந்தை! (விசை) 18. பெற்றதன் பேறே-செவிபெற்றதன் பேறே-அந்தக்கொற்றவன் சொற்கள் செவியுறக் கொண்டேன். (கன) 19. வெற்றியை வேண்டேன்;-ஜய;வெற்றியை வேண்டேன்;-உயிர்அற்றிடு மேனும் அவர்தமைத் தீண்டேன். (பெற்ற) 20. சுற்றங் கொல்வேனோ?-என்தன்சுற்றங் கொல்வேனோ?-கிளைஅற்றபின் செய்யும் அரசுமோர் அரசோ?” (பெற்ற) 21. மிஞ்சிய அருளால்-மிதமிஞ்சிய அருளால்-அந்தவெஞ்சிலை வீரன் பலசொல் விரித்தான். (கன) 22. இம்மொழி கேட்டான்-கண்ணன்இம்மொழி கேட்டான்-ஐயன்செம்மலர் வதனத்திற் சிறுநகை பூத்தான். (கன) 23. வில்லினை யெடடா!-கையில்வில்லினை யெடடா!-அந்தப்புல்லியர் கூட்டத்தைப் பூழ்தி செய்திடடா! (வில்) 24. வாடி நில்லாதே;-மனம்வாடி நில்லாதே;-வெறும்பேடியர் ஞானப் பிதற்றல் சொல்லாதே. (வில்) 25. ஒன்றுள துண்மை-என்றும்ஒன்றுள துண்மை-அதைக்கொன்றி டொணாது குறைத்த லொண்ணாது. (வில்) 26. துன்பமு மில்லை-கொடுந்துன்பமு மில்லை-அதில்இன்பமு மில்லை பிறப்பிறப் பில்லை. (வில்) 27. படைகளுந் தீண்டா-அதைப்படைகளுந் தீண்டா-அனல்கடவு மொண்ணாது புனல்நனை யாது. (வில்) 28. செய்தலுன் கடனே-அறஞ்செய்தலுன் கடனே-அதில்எய்துறும் விளைவினில் எண்ணம் வைக்காதே. (வில்) 69. சூரிய தரிசனம் ராகம்-பூபாளம் சுருதி யின்கண் முனிவரும் பின்னேதூமொழிப்புல வோர் பலர் தாமும்பெரிது நின்தன் பெருமையென் றேத்தும்பெற்றி கண்டுனை வாழ்த்திட வந்தேன்;பரிதி யே! பொருள் யாவிற்கும் முதலே!பானுவே! பொன்செய் பேரொளித் திரளே!கருதி நின்னை வணங்கிட வந்தேன்;கதிர்கொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 1 வேதம் பாடிய சோதியைக் கண்டுவேள்வி பாடல்கள் பாடுதற் குற்றேன்;நாத வார்கட லின்னொலி யோடுநற்ற மிழ்ச்சொல இசையையுஞ் சேர்ப்பேன்;காத மாயிரம் ஓர்கணத் துள்ளேகடுகி யோடும் கதிரினம் பாடிஆத வா! நினை வாழ்த்திட வந்தேன்.அணிகொள் வாண்முகம் காட்டுதி சற்றே. 2 70. ஞாயிறு வணக்கம் கடலின்மீது கதிர்களை வீசிக்கடுகி வாள்மிசை ஏறுதி யையா!படரும் வானொளி யின்பத்தைக் கண்டுபாட்டுப்பாடி மகிழ்வன புட்கள்உடல்ப ரந்த கடலுந் தனுள்ளேஒவ்வொர் நுண்துளி யும்விழி யாகச்சுடரும் நின்தன் வடிவையுட் கொண்டேசுருதி பாடிப் புகழ்கின்ற திங்கே. 1 என்த னுள்ளங் கடலினைப் போலேஎந்த நேரமும் நின்னடிக் கீழேநின்று தன்னகத் தொவ்வொர் அணுவும்நின்தன் ஜோதி நிறைந்தது வாகிநன்று வாழ்ந்திடச் செய்குவை யையா!ஞாயிற் றின்கண் ஒளிதருந் தேவா!மன்று வானிடைக் கொண்டுல கெல்லாம்வாழ நோக்கிடும் வள்ளிய தேவா! 2 காதல்கொண்டனை போலும் மண்மீதே,கண்பிறழ் வின்றி நோக்குகின்றாயேமாதர்ப் பூமியும் நின்மிசைக் காதல்மண்டினாள்,இதில் ஐயமொன்றில்லை;சோதி கண்டு முகத்தில் இவட்கேதோன்று கின்ற புதுநகை யென்னே!ஆதித் தாய்தந்தை நீவிர் உமக்கேஆயி ரந்தரம் அஞ்சலி செய்வேன். 3 71. ஞான பாநு திருவளர் வாழக்கை,கீர்த்தி,தீரம்,நல் லறிவு,வீரம்,மருவுபல் கலையின் சோதி, வல்லமை யென்ப வெல்லாம்,வருவது ஞானத் தாலே வையக முழுதும் எங்கள்பெருமைதான் நிலவி நிற்கப் பிறந்தது ஞான பாநு. 1 கவலைகள்,சிறுமை,நோவு,கைதவம் வறுமைத் துன்பம்,அவலமா மனைத்தைக் காட்டில் அவலமாம் புலைமை யச்சம்,இவையெலாம் அறிவி லாமை என்பதோர் இருளிற் பேயாம்நவமுறு ஞான பாநு நண்ணுக;தொலைக பேய்கள். 2 அனைத்தையும் தேவர்க்காக்கி அறத்தொழில் செய்யும் மேலோர்மனத்திலே சக்தி யாக வளர்வது நெருப்புத் தெய்வம்;தினத்தொளி ஞானங் கண்டீர் இரண்டுமே சேர்ந்தால் வானோர்இனத்திலே கூடி வாழ்வர் மனிதரென் றிசைக்கும் வேதம். 3 பண்ணிய முயற்சியெல்லாம் பயனுற வோங்கும்,ஆங்கேஎண்ணிய எண்ண மெல்லாம் எளிதிலே வெற்றி யெய்தும்;திண்ணிய கருத்தி னோடும் சிரித்திடு முகத்தினோடும்நண்ணிடும் ஞான பாநு,அதனைநாம் நன்கு போற்றின். 4 72. சோமதேவன் புகழ் ஜய சோம, ஜய சோம, ஜய சோம தேவா! ஜய ஜய! சரணம்நயமுடைய இந்திரனை நாயகத் திட்டாய்,வயமிக்க அசரரின் மாயையைச் சுட்டாய்;வியனுலகில் ஆநந்த விண்ணிலவு பெய்தாய்,துயர்நீங்கி யென்னுளஞ் சுடர்கொளச் செய்தாய்;மயல்கொண்ட காதலரை மண்மிசைக் காப்பாய்;உயவேண்டி இருவருளம் ஒன்றுக் கோப்பாய்;புயலிருண் டேகுமுறி யிருள்வீசி வரல்போற்பொய்த்திரள் வருமதைப் புன்னகையில் மாய்ப்பாய் (ஜய) 73. வெண்ணிலாவே! எல்லை யில்லாததோர் வானக் கடலிடைவெண்ணிலாவே!-விழிக்கின்ப மளிப்பதோர் தீவென் றிலகுவைவெண்ணிலாவே!சொல்லையும் கள்ளையும் நெஞ்சையுஞ் சேர்த்திங்குவெண்ணிலாவே!-நின்தன்சோதி மயக்கும் வகையது தானென்சொல்வெண்ணிலாவே!நல்ல ஒளியின் வகைபல கண்டிலன்வெண்ணிலாவே!-(இந்த)நனவை மறந்திடச் செய்வது கண்டிலன்வெண்ணிலாவே!கொல்லும் அமிழ்தை நிகர்த்திடுங் கள்ளொன்றுவெண்ணிலாவே!-வந்துகூடி யிருக்குது நின்னொளி யோடிங்குவெண்ணிலாவே! 1 மாதர் முகத்தை நினக்கிணை கூறுவர்வெண்ணிலாவே!-அஃதுவயதிற் கவலையின் நோவிற் கெடுவதுவெண்ணிலாவே!காதலொருத்தி இளைய பிராயத்தள்வெண்ணிலாவே!-அந்தக்காமன்தன் வில்லை யிணைத்த புருவத்தள்வெண்ணிலாவே!மீதெழும் அன்பின் விளையபுன் னகையினள்வெண்ணிலாவே!-முத்தம்வேண்டிமுன் காடு முகத்தி னெழிலிங்குவெண்ணிலாவே!சாதல் அழிதல் இலாது நிரந்தரம்வெண்ணிலாவே!-நின்தன்முகந் தன்னில் விளங்குவ தென்னைகொல்?வெண்ணிலாவே! 2 நின்னொளி யாகிய பாற்கடல் மீதிங்குவெண்ணிலாவே!-நன்குநீயும் அமுதும் எழுந்திடல் கண்டனன்வெண்ணிலாவே!மன்னு பொருள்க ளமைத்திலும் நிற்பவன்வெண்ணிலாவே!-அந்தமாயன் அப் பாற்கடல் மீதுறல் கண்டனன்வெண்ணிலாவே!துன்னிய நீல நிறத்தள் பராசக்திவெண்ணிலாவே!-இங்குதோன்றும் உலகவ ளேயென்று கூறுவர்வெண்ணிலாவே!பின்னிய மேகச் சடைமிசைக் கங்கையும்வெண்ணிலாவே!-(நல்ல)பெட்புற நீயும் விளங்குதல் கண்டனன்வெண்ணிலாவே! 3 காதலர் நெஞ்சை வெதுப்புவை நீயென்பர்வெண்ணிலாவே!-நினைக்காதல் செய்வார் நெங்சிற் கின்னமு தாகுவைவெண்ணிலாவே!சீத மணிநெடு வானக் குளத்திடைவெண்ணிலாவே!-நீதேசு மிகுந்தவெண் தாமரை போன்றனைவெண்ணிலாவே!மோத வருங்கரு மேகத் திரளினைவெண்ணிலாவே!-நீமுத்தி னொளிதந் தழகுறச் செய்குவைவெண்ணிலாவே!தீது புரிந்திட வந்திடும் தீயர்க்கும்வெண்ணிலாவே!-நலஞ்செய்தொளி நல்குவர் மேலவ ராமன்றோ?வெண்ணிலாவே! 4 மெல்லிய மேகத் திரைக்குள் மறைந்திடும்வெண்ணிலாவே!-உன்தன்மேனி யழகு மிகைபடக் காணுதுவெண்ணிலாவே!நல்லிய லார்யவ னத்தியர் மேனியைவெண்ணிலாவே!-மூடுநற்றிரை மேனி நயமிகக் காட்டிடும்வெண்ணிலாவே!சொல்லிய வார்த்தையில் நாணுற்றநன போலுமவெண்ணிலாவே!-நின்சோதி வதனம் முழுதும் மறைத்தனைவெண்ணிலாவே!புல்லின் செய்த பிழைபொறுத் தேயருள்வெண்ணிலாவே!போகிடச் செய்து நினதெழில் காட்டுதிவெண்ணிலாவே! 5 74. தீ வளர்த்திடுவோம்! யாகப் பாட்டு ராகம்-புன்னாகவராளி பல்லவிதீ வளர்த்திடுவோம்!-பெருந்தீ வளர்த்திடுவோம்! சரணங்கள்1. ஆவியி னுள்ளம் அறிவி னிடையிலும்அன்பை வளர்த்திடுவோம்-விண்ணின்ஆசை வளர்த்திடுவோம்-களிஆவல் வளர்த்திடுவோம்-ஒருதேவி மகனைத் திறமைக் கடவுளைச்செங்கதிர் வானவனை -விண்ணோர் தமைத்தேனுக் கழைப்பவனைப்-பெருந்திரள்சேர்ந்து பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) 2. சித்தத் துணிவினை மானுடர் கேள்வனைத்தீமை யழிப்பவனை-நன்மைசேர்த்துக் கொடுப்பவனைப்-பலசீர்க ளுடையவனைப்-புவிஅத்தனையுஞ்சுட ரேறத் திகழ்ந்திடும்ஆரியர் நாயகனை-உருத்திரன்அன்புத் திருமகனை-பெருந்திரளாகிப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) 3. கட்டுக்கள் போக்கி விடுதலை தந்திடுங்கண்மணி போன்றவனை-எம்மைக்காவல் புரிபவனைத்-தொல்லைக்காட்டை யழிப்பவனைத்-திசைஎட்டும் புகழ்வளர்ந் தோங்கிட வித்தைகள்யாவும் பழகிடவே-புவிமிசைஇன்பம் பெருகிடவே-பெருந்திரள்எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) 4. நெஞ்சிற் கவலைகள் நோவுகள் யாவையும்நீக்கிக் கொடுப்பவனை-உயிர்நீளத் தருபவனை-ஒளிர்நேர்மைப் பெருங்கனலை-நித்தம்அஞ்ச லங்சேலென்று கூறி எமக்குநல்ஆண்மை சமைப்பவனைப் பல் வெற்றிகள்ஆக்கிக் கொடுப்பவனைப்-பெருந்திரள்ஆகிப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) 5. அச்சதைச் சுட்டங்கு சாம்பரு மின்றிஅழித்திடும் வானவனைச்-செய்கைஆற்று மதிச் சுடரைத்-தடையற்ற பெருந்திறலை-எம்முள்இச்சையும் வேட்கையும் ஆசையும் காதலும்ஏற்றதொர் நல்லறமும்-கலந்தொளிஏறுந் தவக்கனலைப்-பெருந்திரள்எய்திப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) 6. வான கத்தைச்சென்று தீண்டுவன் இங்கென்றுமண்டி யெழுந்தழலைக்-கவிவாணர்க்கு நல்லமுதைத்-தொழில்வண்ணந் தெரிந்தவனை-நல்லதேனையும் பாலையும் நெய்யையும் சோற்றையும்தீம்பழம் யாவினையும்-இங்கேயுண்டுதேக்கிக் களிப்பவனைப்-பெருந்திரள்சேர்ந்து பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) 7. சித்திர மாளிகை பொன்னொளிர் மாடங்கள்தேவத் திருமகளிர்-இன்பந்தேக்கிடுந் தேனிசைகள்-சுவைதேறிடு நல்லிளமை-நல்லமுத்து மணிகளும் பொன்னும் நிறைந்தமுழுக்குடம் பற்பலவும்-இங்கேதரமுற்பட்ட நிற்பவனைப்-பெருந்திரள்மொய்த்துப் பணிந்திடுவோம்-வாரீர்! (தீ) 75. வேள்வித் தீ ராகம்-நாதநாமக்கிரியை தாளம்-சதுஸ்ரஏகம் ரிஷிகள் :எங்கள் வேள்விக் கூடமீதில்ஏறுதே தீ!தீ!-இந்நேரம்,பங்க முற்றே பேய்க ளோடப்பாயுதே தீ!தீ!-இந்நேரம் 1 அசுரர் : தோழரே!நம் ஆவி வேகச்சூழுதே தீ! தீ!-ஐயோ!நாம்வாழ வந்த காடு வேகவந்ததே தீ!தீ!-அம்மாவோ! 2 ரிஷி: பொன்னை யொத்தோர் வண்ணமுற்றான்போந்து விட்டானே!-இந்நேரம்,சின்ன மாகிப் பொய் யரக்கர்சிந்தி வீழ்வாரே!-இந்நேரம் 3 அசு: இந்திராதி தேவர் தம்மைஏசி வாழ்ந்தோமே!-ஐயோ!நாம்,வெந்து போக மானிடர்க்கோர்வேத முண்டாமோ!-அம்மாவோ! 4 ரிஷி : வானை நோக்கிக் கைகள் தூக்கிவளருதே தீ!தீ!-இந்நேரம்,ஞான மேனி உதய கன்னிநண்ணி விட்டாளே!-இந்நேரம். 5 அசு: கோடி நாளாய் இவ்வனத்திற்கூடி வாழ்ந்தோமே-ஐயோ!நாம்பாடி வேள்வி மாந்தர் செய்யப்பண்பிழந் தோமே!-அம்மாவோ! 6 ரிஷி:காட்டில் மேயும் காளை போன்றான்காணுவீர் தீ!தீ!-இந்நேரம்,ஓட்டி யோட்டிப் பகையை யெல்லாம்வாட்டுகின்றானே!-இந்நேரம். 7 அசு:வலியி லாதார் மாந்த ரென்றுமகிழ்ந்து வாழ்ந்தோமே-ஐயோ!நாம்கலியை வென்றோர் வேத வுண்மைகண்டு கொண்டாரே!-அம்மாவோ! 8 ரிஷி: வலிமை மைந்தன் வேள்வி முன்னோன்வாய்திறந் தானே!-இந்நேரம்,மலியு நெய்யுந் தேனுமுண்டுமகிழ வந்தானே!-இந்நேரம். 9 அசு: உயிரை விட்டும் உணவை விட்டும்ஓடி வந்தோமே!-ஐயோ!நாம்துயிலுடம்பின் மீதிலுந் தீதோன்றி விட்டானே!-அம்மாவோ! 10 ரிஷி: அமரர் தூதன் சமர நாதன்ஆர்த் தெழுந்தானே!-இந்நேரம்,குமரி மைந்தன் எமது வாழ்விற்கோயில் கொண்டானே!-இந்நேரம். 11 அசு: வருணன் மித்ரன் அர்ய மானும்மதுவை யுண்பாரே-ஐயோ!நாம்பெருகு தீயின் புகையும் வெப்பும்பின்னி மாய்வோமே!-அம்மாவோ! 12 ரிஷி: அமர ரெல்லாம் வந்து நம்முன்அவிகள் கொண்டாரே!-இந்நேரம்,நமனு மில்லை பகையு மில்லைநன்மை கண்டோமே!-இந்நேரம். 13 அசு: பகனு மிங்கே யின்ப மெய்திப்பாடுகின்றானே-ஐயோ!நாம்புகையில் வீழ இந்திரன் சீர்பொங்கல் கண்டீரோ!-அம்மாவோ! 14 ரிஷி:இளையும் வந்தாள் கவிதை வந்தாள்இரவி வந்தானே!இந்நேரம்,விளையுமெங்கள் தீயினாலேமேன்மையுற்றோமே!-இந்நேரம். 15 ரிஷி:அன்ன முண்பீர் பாலும் நெய்யும்அமுது முண்பீரே!-இந்நேரம்,மின்னி நின்றீர் தேவ ரெங்கள்வேள்வி கொள்வீரே!-இந்நேரம். 16 ரிஷி: சோமமுண்டு தேவர் நல்கும்ஜோதி பெற்றோமே!-இந்நேரம்,தீமை தீர்ந்தே வாழி யின்பஞ்சேர்ந்து விட்டோமே!-இந்நேரம். 17 ரிஷி: உடலுயிர்மே லுணர்விலும் தீஓங்கி விட்டானே!-இந்நேரம்,கடவுளர் தாம் எம்மை வாழ்த்திக்கை கொடுத்தாரே!-இந்நேரம். 18 ரிஷி:எங்கும் வேள்வி அமர ரெங்கும்யாங்கணுந் தீ!தீ!-இந்நேரம்,தங்கு மின்பம் அமர வாழ்க்கைசார்ந்து நின்றோமே!-இந்நேரம். 19 ரிஷி: வாழ்க தேவர்! வாழ்க வேள்வி!மாந்தர் வாழ்வாரே!-இந்நேரம்,வாழ்க வையம்! வாழ்க வேதம்!வாழ்க தீ!தீ!தீ!-இந்நேரம். 20 76. கிளிப்பாட்டு திருவப் பணிந்து நித்தம் செம்மைத் தொழில் புரிந்து,வருக வருவதென்றே-கிளியே!-மகிழ்வுற் றிருப்போமடி! வெற்றி செயலுக் குண்டு தியின் நியமமென்று,கற்றுத் தெளிந்த பின்னும்-கிளியே!-கவலைப்படலாகுமோ? துன்ப நினைவு களும் சோர்வும் பயமு மெல்லாம்,அன்பில் அழியுமடீ!-கிளியே!-அன்புக் கழிவில்லை காண். ஞாயிற்றை யெண்ணி யென்றும் நடுமை நிலை பயின்று,ஆயிர மாண்டுலகில்-கிளியே!-அழிவின்றி வாழ்வோ மடீ! தூய பெருங்கனலைச் சுப்பிர மண்ணி யனைநேயத்துடன் பணிந்தால்-கிளியே!-நெருங்கித் துயர் வருமோ? 77. யேசு கிறிஸ்து ஈசன் வந்து லுவையில் மாண்டான்,எழுந்து யிர்த்தனன் நாள் ஒரு மூன்றில்;நேசமா மரியா மக்த லேநாநேரிலே இந்தச் செய்தியைக் கண்டாள்;தேசத் தீர்!இதன் உட்பொருள் கேளீர்;தேவர் வந்து நமக்குட் புகுந்தேநாச மின்றி நமை நித்தங் காப்பார்;நம்அ கந்தையை நாம்கொன்று விட்டால். 1 அன்புகாண் மரியா மக்த லேநா,ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து;முன்பு தீமை வடிவினைக் கொன்றால்மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்;பொன்பொ லிந்த முகத்தினிற் கண்டேபோற்று வாள் அந்த நல்லுயிர் தன்னை;அன்பெனும் மரியா மக்த லேநாஆஹ! சாலப் பெருங்களி யிஃதே. 2 உண்மை யென்ற சிலுவையிற் கட்டிஉணர்வை ஆணித் தவங்கொண் டடித்தால்,வண்மைப் பேருயிர் யேசு கிறிஸ்துவான மேனியில் அங்கு விளங்கும்;பெண்மைகாண் மரியா மக்த லேநா,பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து;நுண்மை கொண்ட பொருளிது கண்டீர்நொடியி லிஃத பயின்றிட லாகும். 3 78. அல்லா பல்லவிஅல்லா,அல்லா,அல்லா! சரணங்கள்பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி யண்டங்கள்எல்லாத் திசையிலுமோ ரெல்லை யில்லா வெளி வானிலே! நில்லாது சுழன்றோட நியமஞ் செய்தருள் நாயகன்சொல்லா லும்மனத்தாலுந்தொடரொணாதபெருஞ் சோதி! (அல்லா......,) கல்லாதவ ராயினும் உண்மை சொல்லாதவ ராயினும்பொல்லாத ராயினும் தவ மில்லாதவ ராயினும்நல்லாருரை நீதி யின்படி நில்லாதவ ராயினும்எல்லாரும் வந்தேத்து மளவில் யமபயங் கெடச்செய்பவன் (அல்லா......,)
5000 days ago
5000 days ago