உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கண்ணன் பாட்டு

கண்ணன் பாட்டு

1. கண்ணன் - என் தோழன் (புன்னாகவராளி - திஸ்ரஜாதி ஏகதாளம்)வத்ஸல ரசம் 1. பொன்னவிர் மேனிச் சுபத்திரை மாதைப்புறங்கொண்டு போவ தற்கே - இனிஎன்ன வழியென்று கேட்கில், உபாயம்இருகணத் தேயுரைப் பான்; - அந்தக்கன்னன் வில்லாளர் தலைவனைக் கொன்றிடக்காணும் வழியொன் றில்லேன் - வந்திங்குஉன்னை யடைந்தேன் என்னில் உபாயம்ஒருகணத் தேயுரைப் பான். 2. கானகத்தே சுற்று நாளிலு<ம் நெஞ்சிற்கலக்க மிலாதுசெய் வான்; - பெருஞ்சேனைத் தலைநின்று போர்செய்யும் போதினில்தேர்நடத் திக்கொடுப் பான்; - என்றன்ஊனை வருத்திடு நோய்வரும் போதினில்உற்ற மருந்துசொல் வான்;- நெஞ்சம்ஈனக் கவலைக ளெய்திடும் போதில்இதஞ்சொல்லி மாற்றிடு வான்; 3. பிழைக்கும் வழிசொல்ல வேண்டுமென் றாலொருபேச்சினி லேசொல்லு வான்;உழைக்கும் வழிவினை யாளும் வழிபயன்உண்ணும் வழியுரைப் பான்;அழைக்கும் பொழுதினிற் போக்குச் சொல்லாமல்அரைநொடிக் குள்வரு வான்;மழைக்குக் குடை, பசி நேரத் துணவென்றன்வாழ்வினுக் கெங்கள்கண் ணன்; 4. கேட்டபொழுதில் பொருள் கொடுப்பான்; சொல்லுங்கேலி பொறுத்திடு வான்; எனைஆட்டங்கள் காட்டியும் பாட்டுக்கள் பாடியும்ஆறுதல் செய்திடு வான்; - என்றன்நாட்டத்திற் கொண்ட குறிப்பினை இஃதென்றுநான்சொல்லும் முன்னுணர் வான்; அன்பர்கூட்டத்தி லேயிந்தக் கண்ணனைப் போலன்புகொண்டவர் வேறுள ரோ? 5. உள்ளத்தி லேகரு வங்கொண்ட போதினில்ஓங்கி யடித் திடுவான்; நெஞ்சில்கள்ளத்தைக் கொண்டொரு வார்த்தைசொன் னாலங்குகாறி யுமிழ்ந்திட வான்; சிறுபள்ளத்தி லேநெடு நாள்ழு குங்கெட்டபாசியை யெற்றி விடும் - பெருவெள்ளத்தைப் போலருள் வார்த்தைகள் சொல்லிமெலிவு தவிர்த்திடு வான். 6. சின்னக் குழந்தைகள் போல்விளை யாடிச்சிரித்துக் களித்திடு வான்; நல்லவன்ன மகளிர் வசப்பட வேபலமாயங்கள் சூழ்ந்திடு வான்; அவன்சொன்ன படி நடவாவிடி லோமிகத்தொல்லை யிழைத்திடு வான்; கண்ணன்தன்னை யிழந்து விடில், ஐயகோ! பின்சகத்தினில் வாழ்வதி லேன். 7. கோபத்தி லெயொரு சொல்லிற் சிரித்துக்குலுங்கிடச் செய்திடு வான்; மனஸ்தாபத்திலே யொன்று செய்து மகிழ்ச்சிதழைத்திடச் செய்திடு வான்; பெரும்ஆபத்தி னில்வந்து பக்கத்தி லேநின்றுஅதனை விலக்கிடு வான்; சுடர்த்தீபத்தி லேவிழும் பூச்சிகள் போல்வருந்தீமைகள் கொன்றிடு வான். 8. உண்மை தவறி நடப்பவர் தம்மைஉதைத்து நசுக்கிடுவான்; அருள்வண்மையி னாலவன் மாத்திரம் பொய்கள்மலைமலை யாவுரைப் பான்; நல்லபெண்மைக் குணமுடையான்; சில நேரத்தில்பித்தர் குணமுடை யான்; மிகத்தண்மைக் குணமுடை யான் சில நேரம்தழலின் குணமுடை யான். 9. கொல்லுங் கொலைக்கஞ்சி டாத மறவர்குணமிகத் தானுடை யான்; கண்ணன்சொல்லு மொழிகள் குழந்தைகள் போலொருசூதறி யாதுசொல் வான்; என்றும்நல்லவ ருக்கொரு தீங்கு நண்ணாதுநயமுறக் காத்திடு வான்; கண்ணன்அல்லவ ருக்கு விடத்தினில் நோயில்அழலினி லுங்கொடி யான். 10. காதல் விளைய மயக்கிடும் பாட்டினில்கண்மகிழ் சித்திரத் தில் - பகைமோதும் படைத்தொழில் யாவினு மேதிறம்முற்றிய பண்டிதன் காண்; உயர்வேத முணர்ந்த முனிவ ருணர்வினில்மேவு பரம்பொருள் காண்; நல்லகீதை யுரைத்தெனை இன்புறச் செய்தவன்கீர்த்திகள் வாழ்த்திடுவேன். 2. கண்ணன் - என் தாய்(நொண்டிச் சிந்து) 1. உண்ண உண்ணத் தெவிட்டாதே - அம்மைஉயிரெனும் முலையினில் உயர்வெனும் பால்;வண்ணமுற வைத்தெனக் கே - என்றன்வாயினிற்கொண் டூட்டுமோர் வண்மையுடையாள்,கண்ணனெனும் பெயருரடையாள், என்னைக்கட்டிநிறை வான் எனுந்தன் கையி லணைத்துமண்ணெனுந்தன் மடியில் வைத்தே - பலமாயமுறுங் கதைசொல்லி மனங்களிப் பாள். 2. இன்பமெனச் சில கதைகள் - எனக்கேற்றமென்றும் வெற்றி யென்றும் சில கதைகள்துன்பமெனச் சில கதைகள் - கெட்டதோல்வியென்றும் வீழ்ச்சியென்றும் சில கதைகள்.என்பருவம் என்றன் விருப்பம் - எனும்இவற்றினுக் கிணங்கவென் னுளமறிந்தேஅன்பொடவள் சொல்லிவரு வாள்; அதில்அற்புதமுண் டாய்ப்பர வசமடை வேன். 3. விந்தைவிந்தை யாக எனக்கே - பலவிதவிதத் தோற்றங்கள் காட்டுவிப் பாள்;சந்திரனென் றொரு பொம்மை - அதில்தண்ணமுதம் போலஒளி பரந்தொழுகும்மந்தை மந்தையா மேகம் - பலவண்ணமுறும் பொம்மையது மழைபொழியும்முந்தஒரு சூரியனுண்டு - அதன்முகத்தொளி கூறுதற்கொர் மொழியிலை யே. 4. வானத்து மீன்க ளுண்டு - சிறுமணிகளைப் போல்மின்னி நிறைந்திருக்கும்;நானத்தைக் கணக்கிடவே - மனம்நாடிமிக முயல்கினும் கூடுவதில்லை;கானத்து மலைக ளுண்டு - எந்தக்காலமுமொ ரிடம்விட்டு நகர்வதில்லை;மோனத்தி லேயிருக்கும் - ஒருமொழியுரை யாதுவிளை யாடவருங் காண். 5. நல்லநல்ல நதிகளுண்டு - அவைநாடெங்கும் ஓடிவிளை யாடி வாருங்காண்;மெல்ல மெல்லப் போயவை தாம் - விழும்விரிகடற் பொம்மையது மிகப் பெரிதாம்;எல்லையதிற் காணுவ தில்லை; அலைஎற்றிநுரை கக்கியொரு பாட்டிசைக்கும்;ஒல்லெனுமப் பாட்டினிலே - அம்மைஓமெனும் பெயரென்றும் ஒலித்திடுங் காண். 6. சோலைகள் காவினங்கள் - அங்குச்சூழ்தரும் பலநிற மணிமலர்கள்சாலவும் இனியனவாய் - அங்குத்தருக்களில் தூங்கிடும் கனிவகைகள்ஞாலமுற்றிலும் நிறைத் தே - மிகநயந்தரு பொம்மைகள் எனக்கென வே;கோலமுஞ் சுவையுமுற - அவள்கோடிபல் கோடிகள் குவித்துவைத் தாள். 7. தின்றிடப் பண்டங்களும் - செவிதெவிட்டறக் கேட்கநற் பாட்டுக ளும்,ஒன்றுறப் பழகுதற்கே - அறிவுடையமெய்த் தோழரும் அவள்கொடுத் தாள்;கொன்றிடு மெனஇனி தாய் - இன்பக்கொடுநெருப் பாய், அனற் சுவையமு தாய்,நன்றியல் காதலுக் கே -இந்தநாரியர் தமையெனைச் சூழவைத் தாள். 8. இறகுடைப் பறவைக ளும் - நிலந்திரிந்திடும் விலங்குகள் ஊர்வன கள்அறைகடல் நிறைந்திட வே -எண்ணில்அமைத்திடற் கரியபல் வகைப்பட வேசுறவுகள் மீன்வகை கள் - எனத்தோழர்கள் பலருமிங் கெனக்களித் தாள்;நிறைவுற இன்பம்வைத் தாள்; - அதைநினைக்கவும் முழுதி<லுங் கூடுதில்லை. 9. சாத்திரம் கோடி வைத்தாள்; அவைதம்மினும் உயர்ந்ததொர் ஞானம் வைத்தாள்;மீத்திடும் பொழுதினி லே - நான்வேடிக்கை யுறக்கண்டு நகைப்பதற் கேகோத்தபொய் வேதங்க ளும் - மதக்கொலைகளும் அரசர்தம் கூத்துக்க ளும்மூத்தவர் பொய்ந்நடை யும் - இளமூடர்தம் கவலையும் அவள்புனைந் தாள்; 10. வேண்டிய கொடுத்திடு வாள்; அவைவிரும்புமுன் கொடுத்திட விரைந்திடு வாள்;ஆண்டருள் புரிந்திடு வாள்; அண்ணன்அருச்சுனன் போலெனை ஆக்கிடு வாள்;யாண்டுமெக் காலத்தி னும் -அவள்இன்னருள் பாடுநற் றொழில்புரி வேன்நீண்டதொர் புகழ்வாழ் வும் -பிறநிகரறு பெருமையும் அவள் கொடுப்பாள். 3. கண்ணன் - என் தந்தை நொண்டிச் சிந்துப்ரதான ரஸம் - அற்புதம் 1. பூமிக் கெனைய னுப்பி னான்; அந்தப்புதமண்ட லத்திலென் தம்பிக ளுண்டு;நேமித்த நெறிப்படி யே - இந்தநெடுவெளி யெங்கணும் நித்தம் உருண்டேபோமித் தரைகளி லெல்லாம் - மனம்போலவிருந் தாளுபவர் எங்க ளினத்தார்.சாமி இவற்றினுக் கெல்லாம் - எங்கள்தந்தையவன் சரிதைகள் சிறி துரைப்பேன். 2. செவ்வத்திற்கோர் குறையில்லை; எந்தைசேமித்து வைத்த பொன்னுக் களவொன் றில்லை;கல்வியில் மிகச் சிறந்தோன் - அவன்கவிதையின் இனிமையொர் கணக்கி லில்லை;பல்வகை மாண்பி னிடையே - கொஞ்சம்பயித்தியம் அடிக்கடி தோன்றுவ துண்டு;நல்வழி செல்லு பவரை - மனம்நையும்வரை சோதலைசெய் நடத்தை யுண்டு. 3. நாவு துணிகுவ தில்லை - உண்மைநாமத்தை வெளிப்பட உரைப்பதற்கே;யாவருந் தெரிந்திடவே - எங்கள்ஈசனென்றும் கண்ணனென்றும் சொல்லுவதுண்டு.மூவகைப் பெயர் புனைந்தே - அவன்முகமறி யாதவர் சண்டைகள் செய்வார்;தேவர் குலத்தவன் என்றே - அவன்செய்திதெரி யாதவர் சிலருரைப்பார். 4. பிறந்தது மறக் குலத்தில்; அவன்பேதமற வளர்ந்ததும் இடைக்குலத்தில்; சிறந்தது பார்ப்பனருள்ளே; சிலசெட்டிமக்க ளோடுமிகப் பழக்க முண்டு;நிறந்தனிற் கருமை கொண்டான்; அவன்நேயமுறக் களிப்பது பொன்னிறப் பெண்கள்!துறந்த நடைக ளுடையான் - உங்கள்சூனியப்பொய்ச் சாத்திரங்கள் கண்டு நகைப்பான். 5. ஏழைகளைத் தோழமை கொள்வான்; செல்வம்ஏறியார் தமைக்கண்டு சீறி விழுவான்;தாழவருந் துன்ப மதிலும் - நெஞ்சத்தளர்ச்சிகொள் ளாதவர்க்குச் செல்வ மளிப்பான்;நாழிகைக்கொர் புத்தி யுடையான்; - ஒருநாளிலிருந்த படிமற்றோர் நாளினி லில்லை.பாழிடத்தை நாடி யிருப்பான் - பலபாட்டினிலும் கதையிலும் நேரமழிப் பான். 6. இன்பத்தை இனிதென வும் - துன்பம்இனிதில்லை யென்றுமவன் எண்ணுவ தில்லை;அன்பு மிகவுடையான் - தெளிந்தறிவினில் உயிர்க்குலம் ஏற்ற முறவே,வன்புகள் பல புரிவான்; ஒருமந்திரியுண் டெந்தைக்கு விதியென்பவன்;முன்பு விதித்த தனையே - பின்புமுறைப்படி அறிந்துண்ண மூட்டி விடுவான். 7. வேதங்கள் கோத்து வைத்தான் - அந்தவேதங்கள் மனிதர்தம் மொழியி லில்லை;வேதங்க ளென்று புவியோர் சொல்லும்வெறுங்கதைத் திரளிலவ் வேதமில்லை;வேதங்க ளென்றவற் றுள்ளே - அவன்வேதத்திற் சிலசில கலந்ததுண்டு;வேதங்க ளன்றி யொன்றில்லை - இந்தமேதினி மாந்தர் சொலும் வார்த்தைக ளெல்லாம். 8. நாலு குலங்கள் அமைத்தான்; அதைநாசமுறப் புரிந்தனர் மூட மனிதர்,சீலம் அறிவு தருமம் - இவைசிறந்தவர் குலத்தினில் சிறந்தவராம்;மேலவர் கீழவ ரென்றே - வெறும்வேடத்திற் பிறப்பினில் விதிப்பன வாம்போலிச் சுவடியை யெல்லாம் - இன்றுபொசுக்கிவிட்டாலெவர்க்கும் நன்மையுண்டென்பான். 9. வயது முதிர்ந்து விடினும் - எந்தைவாலிபக் களையென்றும் மாறுவதில்லை;துயரில்லை; மூப்பு மில்லை - என்றும்சோர்வில்லை; நோயொன்றும் தொடுவ தில்லை;பயமில்லை, பரிவொன்றில்லை, எவர்பக்கமும்நின் றெதிர்ப்பக்கம் வாட்டுவ தில்லைநயமிகத் தெரிந்தவன் காண்; - தனிநடுநின்று விதிச்செயல் கண்டு மகிழ்வான். 10. துன்பத்தில் நொந்து வருவோர் - தம்மைத்தூவென் றிகழ்ந்து சொல்லி வன்பு கனிவான்;அன்பினைக் கைக்கொள் என்பான்; துன்பம்அத்தனையும் அப்பொழுது தீர்ந்திடும் என்பான்;என்புடை பட்ட பொழுதும் - நெஞ்சில்ஏக்கமுறப் பொறுப்பவர் தம்மை உகப்பான்;இன்பத்தை எண்ணு பவர்க்கே - என்றும்இன்பமிகத் தருவதில் இன்ப முடையான். 4. கண்ணன் - என் சேவகன் கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்ஏனடா நீ நேற்றைக் கிங்குவர வில்லை யென்றால்பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார் 5 பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்உள்வீட்டுச் செய்தி யெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்.     10 சேவகரால் பட்ட சிரமமிக வுண்டு கண்டீர்;சேவகரில் லாவிடிலோ, செய்கை நடக்கவில்லைஇங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்;மாடு கன்றுமேய்த்திடுவேன், மக்களைநான் காத்திடுவேன்;   15 வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தேஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானா<லும்; 20 இரவிற் பகலிலே எந்நேர மானா<லும்சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனேசுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்பேன்;கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!ஆன பொழுதுங்கோலடி குத்துப்போர் மற்போர் 25 நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்என்று பலசொல்லி நின்றான். ஏதுபெயர்? சொல் என்றேன்ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலு<ள்ளோர் என்னை என்றான்.கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்ல குணம்ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் - ஈங்கிவற்றால்;     30 தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்கூலியென்ன கேட்கின்றாய்? கூறு கென்றேன். ஐயனே!தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லைநானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும் 35 ஆன வயதிற் களவில்லை; தேவரீர்ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ளகாதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை யென்றான்.பண்டைக் காலத்துப் பயித்தியத்தில் ஒன்றெனவேகண்டு மிகவும் களிப்புடனே நானவனை 40 ஆளாகக் கொண்டு விட்டேன் அன்று முதற்கொண்டுநாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாதுகண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என்குடும்பம்    45 வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டறியேன்வீதி பெருக்குகிறான்; வீடுசுத்த மாக்குகிறான்தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப் 50 பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்துநண்பனாய், மந்திரியாய், நல்லா சிரியனுமாய்,பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய், எங்கிருந்தோவந்தான், இடைச்சாதியென்று சொன்னான்.     55 இங்கிவனை யான்பெறவே என்னதவஞ் செய்துவிட்டேன்!கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,கல்வி, அறிவு, கவிதை, சிவயோகம்,     60 தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றனகாண்!கண்ணனை நான் ஆட்கொண்டேன்! கண்கொண்டேன்! கண்கொண்டேன்!கண்ணனெனை யாட் கொள்ளக் காரணமும் உள்ளனவே! 5. கண்ணன் - என் அரசன் 1. பகைமை முற்றி முதிர்ந்திடு மட்டிலும்பார்த்திருப்ப தல்லா லொன்றுஞ் செய்திடான்;நகைபுரிந்து பொறுத்துப் பொறுத்தையோநாட்கள் மாதங்கள் ஆண்டுகள் போக்குவான். 2. கண்ணன் வென்று பகைமை யழிந்துநாம்கண்ணிற் காண்ப தரிதெனத் தோன்றுமே;எண்ணமிட் டெண்ண மிட்டுச் சலித்துநாம்இழந்த நாள்கள் யுகமெனப் போகுமே. 3. படைகள் சேர்த்தல் பரிசனம் சேர்த்திடல்பணமுண் டாக்கல் எதுவும் புரிந்திடான்;இடையன், வீரமி லாதவன், அஞ்சினோன்என்றவர் சொலும் ஏச்சிற்கு நாணிலான். 4. கொல்லப் பூத மனுப்பிடு மாமனேகோலு யர்த்துல காண்டு களித்திடமுல்லை மென்னகை மாதர்க்கும் பாட்டிற்கும்மோக முற்றுப் பொழுதுகள் போக்குவான். 5. வான நீர்க்கு வருந்தும் பயிரெனமாந்தர் மற்றிவண் போர்க்குத் தவிக்கவும்,தானம் கீர்த்தனை தாளங்கள் கூத்துக்கள்தனிமை வேய்ங்குழல் என்றிவை போற்றுவான். 6. காலினைக் கையினால் பற்றிக்கொண்டு நாம்கதியெமக் கொன்று காட்டுவை யென்றிட்டால்நாலி லொன்று பலித்திடுங் காணென்பான்;நாமச் சொல்லின் பொருளெங் குணர்வதே? 7. நாம வன்வலி நம்பியி ருக்கவும்,நாண மின்றிப் பதுங்கி வளருவான்;தீமை தன்னை விலக்கவுஞ் செய்குவான்;சிறுமை கொண்டொழித் தோடவுஞ் செய்குவான். 8. தந்தி ரங்கள் பயிலவுஞ் செய்குவான்;சவுரி யங்கள் பழகவுஞ் செய்குவான்மந்தி ரத்திற னும்பல காட்டுவான்;வலிமை யின்றிச் சிறுமையில் வாழ்குவான். 9. காலம் வந்துகை கூடுமப் போதிலோர்கணத்தி லேடதி தாக விளங்குவான்;ஆல கால விடத்தினைப் போலவே,அகில முற்றும் அசைந்திடச் சீறுவான். 10. வேரும் வேரடி மண்ணு மிலாமலேவெந்து போகப் பகைமை பொசுக்குவான்;பாரும் வானமும் ஆயிர மாண்டுகள்பட்ட துன்பங்கள் கணத்திடை மாற்றுவான். 11. சக்கரத்தை யெடுப்ப தொருகணம்;தருமம் பாரில் தழைத்தல் மறுகணம்இக்க ணத்தில் இடைக்கண மொன்றுண்டோ?இதனுள் ளேபகை மாய்த்திட வல்லன்காண்! 12. கண்ண னெங்கள் அரசன் புகழினைக்கவிதை கொண்டெந்தக் காலமும் போற்றுவேன்திண்ணை வாயில் பெருக்கவந் தேனெனைத்தேசம் போற்றத்தன் மந்திரி யாக்கினான். 13. நித்தச் சோற்றினுக் கேவல் செயவந்தேன்நிகரி லாப்பெருஞ் செல்வம் உதவினான்வித்தை நன்குகல் லாதவன் என்னுள்ளேவேத நுட்பம் விளங்கிடச் செய்திட்டான். 14. கண்ண னெம்பெரு மானருள் வாழ்கவே!கலிய ழிந்து புவித்தலம் வாழ்கவே!அண்ண லின்னருள் நாடிய நாடுதான்அவலம் நீங்கிப் புகழில் உயர்கவே! 6. கண்ணன் - என் சீடன் ஆசிரியப்பா யானே யாகி என்னலாற் பிறவாய்யானும் அவையுமாய் இரண்டினும் வேறாய்யாதோ பொருளாம் மாயக் கண்ணன்என்னிலும் அறிவினிற் குறைந்தவன் போலவும்,என்னைத் துணைக்கொண்டு, என்னுடை முயற்சியால்         5 என்னடை பழகலால் என்மொழி கேட்டலால்மேம்பா டெய்த வேண்டினோன் போலவும்,யான்சொலுங் கவிதை என்மதி யளவைஇவற்றினைப் பெருமை யிலங்கின வென்றுகருதுவான் போலவும், கண்ணக் கள்வன் 10 சீடனா வந்தெனைச் சேர்ந்தனன், தெய்வமே!பேதையேன் அவ்வலைப் பின்னலில் வீழ்ந்துபட்டன தொல்லை பலபெரும் பாரதம்;உளத்தினை வென்றிடேன்; <உலகினை வெல்லவும்தானகஞ் சுடாதேன் பிறர்தமைத் தானெனும் 15 சிறுமையி னகற்றிச் சிவத்திலே நிறுத்தவும்,தன்னுளே தெளிவும் சலிப்பிலா மகிழ்ச்சியும்உற்றிடேன்; இந்தச் சகத்திலே யுள்ளமாந்தர்க் குற்ற துயரெலாம் மாற்றிஇன்பத் திருத்தவும் எண்ணிய பிழைக்கெனைத் 20 தண்டனை புரிந்திடத் தானுளங் கொண்டு,மாயக் கண்ணன் வலிந்தெனைச் சார்ந்து,புகழ்ச்சிகள் கூறியும், புலமையை வியந்தும்பல்வகை யால்அகப் பற்றுறச் செய்தான்,வெறும்வாய், மெல்லங் கிழவிக் கிஃதோர்  25 அவலாய் மூண்டது; யானுமங் கவனைஉயர்நிலைப் படுத்தலில் ஊக்கமிக் கவனாய்,இன்னது செய்திடேல், இவரொடு பழகேல்,இவ்வகை மொழிந்திடேல், இனையன விரும்பேல்,இன்னது கற்றிடேல், இன்னநூல் கற்பாய், 30 இன்னவ ருறவுகொள், இன்னவை விரும்புவாய்எனப்பல தருமம் எடுத்தெடுத் தோதி,ஓய்விலா தவனோ டுயிர்விட லானேன்கதையிலே கணவன் சொல்லினுக் கெல்லாம்எதிர்செயும் மனைவிபோல், இவனும்நான் காட்டும் 35 நெறியினுக் கெல்லாம் நேரெதிர் நெறியேநடப்பா னாயினன், நானிலத் தவர்தம்மதிப்பையும் புகழுறு வாழ்வையும் புகழையும்தெய்வமாக் கொண்ட சிறுமதி, யுடையேன்கண்ணனாஞ் சீடன், யான் காட்டிய வழியெலாம் 40 விலகியே நடக்கும் விநோதமிங் கன்றியும்,உலகினர் வெறுப்புறும் ஒழுக்கமத் தனையும்தலையாக் கொண்டு சார்பெலாம் பழிச்சொலும்இகழுமிக் கவனாய், என்மனம் வருந்தநடந்திடல் கண்டேன்; நாட்பட நாட்படக் 45 கண்ணனும் தனது கழிபடு நடையில்மிஞ்சுவா னாகி, வீதியிற் பெரியோர்கிழவிய ரெல்லாம் கிறுக்கனென் றிவனைஇகழ்ச்சியோ டிரக்கமுற் றேளனம் புரியும்நிலையும் வந்திட்டான். நெஞ்சிலே யெனக்குத் 50 தோன்றிய வருத்தஞ் சொல்லிடப் படாதுமுத்தனாக் கிடநான் முயன்றதோர் இளைஞன்பித்தனென் றுலகினர் பேசிய பேச்சென்நெஞ்சினை அறுத்தது; நீதிகள் பலவும்தந்திரம் பலவும் சாத்திரம் பலவும் 55 சொல்லிநான் கண்ணனைத் தொளைத்திட லாயினேன்தேவ நிலையிலே சேர்த்திடா விடினும்,மானுடந் தவறி மடிவுறா வண்ணம்,கண்ணனை நானும் காத்திட விரும்பித்தீயெனக் கொதித்துச் சினமொழி யுரைத்தும் 60 சிரித்துரை கூறியும், செள்ளென விழுந்தும்,கேலிகள் பேசிக் கிளறியும், இன்னும்எத்தனை வகையிலோ என்வழிக் கவனைக்கொணர்ந்திட முயன்றேன்; கொள்பய னொன்றிலைகண்ணன் பித்தனாய்க் காட்டா ளாகி, 65 எவ்வகைத் தொழிலிலும் எண்ணமற் றவனாய்,எவ்வகைப் பயனிலுங் கருத்திழந் தவனாய்,குரங்காய்க் கரடியாய்க் கொம்புடைப் பிசாசாய்யாதோ பொருளாய், எங்ஙனோ நின்றான்இதனால்,   70 அகந்தையும் மமதையும் ஆயிரம் புண்ணுற;யான்கடுஞ் சினமுற்று எவ்வகை யானும்கண்ணனை நேருறக் கண்டே தீர்ப்பேன்எனப்பெருந் தாபம் எய்தினே னாகி,எவ்வா றேனும் இவனையோர் தொழிலில் 75 ஓரிடந் தன்னில் ஒருவழி வலியநிறுத்துவோ மாயின் நேருற் றிடுவான்என்றுளந் தெண்ணி இசைந்திடுஞ் சமயங்காத்திருந் திட்டேன், ஒருநாள் கண்ணனைத் தனியே எனது வீட்டினிற் கண்டு  80 மகனே, என்பால் வரம்பிலா நேசமும்அன்பும்நீ யுடையை; அதனையான் நம்பி, நின்னிட மொன்று கேட்பேன்; நீயதுசெய்திடல் வேண்டும்; சேர்க்கையின் படியேமாந்தர்தஞ் செயலெலாம் வகுப்புறல் கண்டாய். 85 சாத்திர நாட்டமும் தருக்கமும் கவிதையில்மெய்ப்பொரு ளாய்வதில் மிஞ்சிய விழைவும்கொண்டோர் தமையே அருகினிற் கொண்டுபொருளினுக் கலையும் நேரம் போகமிஞ்சிய பொழுதெலாம் அவருடன் மேவி 90 இருந்திட லாகுமேல் எனக்குநன் றுண்டாம்;பொழுதெலாம் என்னுடன் போக்கிட விரும்பும்அறிவுடை மகனிங் குனையலால் அறிந்திடேன்.ஆதலால்,என்பயன் கருதி, எனக்கொரு துணையாய் 95 என்னுடன் சிலநாள் இருந்திட நின்னைவேண்டி நிற்கின்றேன், வேண்டுதல் மறுத்தேஎன்னைநீ துன்பம் எய்துவித் திடாமே,இவ்வுரைக் கிணங்குவாய் என்றேன், கண்ணனும்,அங்ஙனே புரிவேன். ஆயின் நின் னிடத்தே 100 தொழிலிலாது யாங்ஙனம் சோம்பரில் இருப்பது?காரிய மொன்று காட்டுவை யாயின்,இருப்பேன் என்றான். இவனுடைய இயல்பையும்திறனையுங் கருதி, என் செய்யுளை யெல்லாம்நல்லதோர் பிரதியில் நாடொறும் எழுதிக் 105 கொடுந்திடுந் தொழிலினைக் கொள்ளுதி என்றேன்நன்றெனக் கூறியோர் நாழிகை யிருந்தான்;செல்வேன் என்றான்; சினத்தோடு நானும்பழங்கதை யெழுதிய பகுதியொன் றினையவன்கையினிற் கொடுத்துக் கவனுற இதனை 110 எழுதுக என்றேன்; இணங்குவான் போன்றதைக்கையிலே கொண்டு கணப்பொழு திருந்தான்செல்வேன் என்றான். சினந்தீ யாகிநான்ஏதடா, சொன்ன சொல் அழிந்துரைக் கின்றாய்;பித்தனென் றுன்னை உலகினர் சொல்வது 115 பிழையிலை போ<லும் என்றேன், அதற்குநாளைவந் திவ்வினை நடத்துவேன் என்றான்.இத்தொழி லிங்கே இப்பொழு தெடுத்துச்செய்கின் றனையா? செய்குவ தில்லையா?ஓருரை சொல் என் றுறுமினேன். கண்ணனும் 120 இல்லை யென் றொருசொல் இமைக்குமுன் கூறினான்.வெடுக்கெனச் சினத்தீ வெள்ளமாய்ப் பாய்ந்திடக்கண்சிவந் திதழ்கள் துடித்திடக் கனன்றுநான்சீச்சி, பேயே! சிறிதுபோழ் தேனும்இனியென் முகத்தின் எதிர்நின் றிடாதே; 125 என்றுமிவ் வுலகில் என்னிடத் தினிநீபோந்திடல் வேண்டா, போ, போ, போ என்றுஇடியுறச் சொன்னேன். கண்ணனும் எழுந்துசெல்குவ னாயினன். விழிநீர் சேர்ந்திடமகனே! போகுதி வாழ்கநீ; நின்னைத் 130 தேவர் காத்திடுக! நின்தனைச் செம்மைசெய்திடக் கருதி ஏதேதோ செய்தேன்,தோற்றுவிட் டேனடா! சூழ்ச்சிகள் அழிந்தேன்.மறித்தினி வாராய், செல்லுதி வாழி நீ!எனத்துயர் நீங்கி அமைதியோ டிசைத்தேன். 135 சென்றனன் கண்ணன் திரும்பியோர் கணத்தேஎங்கிருந் தோநல் லெழுதுகோல் கொணர்ந்தான்;காட்டிய பகுதியைக் கவினுற வரைந்தான்;ஐயனே, நின்வழி யனைத்தையுங் கொள்ளுவேன்.தொழில்பல புரிவேன். துன்பமிங் கென்றும். 140 இனிநினக் கென்னால், எய்திடா தெனப்பலநல்லசொல் <லுரைத்து நகைத்தனன் மறைந்தான்மறைந்ததோர் கண்ணன் மறுகணத் தென்றன்நெஞ்சிலே தோன்றி நிகழ்த்துவா னாயினன்மகனே, ஒன்றை யாக்குதல் மாற்றுதல் 145 அழித்திட லெல்லாம் நின்செய லன்றுகாண்;தோற்றேன் எனநீ உரைத்திடும் பொழுதிலேவென்றாய், உலகினில் வேண்டிய தொழிலெலாம்ஆசையுந் தாபமும் அகற்றியே புரிந்துவாழ்க நீ என்றான், வாழ்கமற் றவனே! 150 7. கண்ணன் - எனது சற்குரு புன்னாகவராளி - திஸ்ர ஜாதி - ஏகதாளம்ரசங்கள்: அற்புதம், பக்தி 1. சாத்திரங் கள்பல தேடினேன் - அங்குச்சங்கையில் லாதன சங்கையாம் -பழங்கோத்திரங்கள் சொல்லு மூடர்தம் - பொய்ம்மைக்கூடையில் உண்மை கிடைக்குமோ? - நெஞ்சில்மாத்திரம் எந்த வகையிலும் - சகமாயம் உணர்ந்திடல் வேண்டுமே - என்னும்ஆத்திரம்நின்ற திதனிடை - நித்தம்ஆயிரந் தொல்லைகள் சூழ்ந்தன 2. நாடு முழுதிலுஞ் சுற்றிநான் - பலநாள்கள் அலைந்திடும் போதினில், - நிறைந்தோடும் யமுனைக் கரையிலே - தடிஊன்றிச் சென்றாரொர் கிழவனார்; - ஒளிகூடுமுகமும், தெளிவுதான் - குடிகொண்ட விழியும், சடைகளும் - வெள்ளைத்தாடியும் கண்டு வணங்கியே - பலசங்கதி பேசி வருகையில் 3. என்னுளத் தாசை யறிந்தவர் - மிகஇன்புற் றுரைத்திட லாயினர் - தம்பிநின்னுளத் திற்குத் தகுந்தவன் - சுடர்நித்திய மோனத் திருப்பவன், - உயர்மன்னர் குலத்தில் பிறந்தவன் - வடமாமது ரைப்பதி யாள்கின்றான் - கண்ணன்தன்னைச் சரணென்று போவையேல் - அவன்சத்தியங் கூறுவன் என்றனர். 4. மாமது ரைப்பதி சென்றுநான் - அங்குவாழ்கின்ற கண்ணனைப் போற்றியே, - என்றன்நாமமும் ஊரும் கருத்துமே - சொல்லிநன்மை தருகென வேண்டினன்; - அவன்காமனைப் போன்ற வடிவமும் - இளங்காளையர் நட்பும் பழக்கமும் - கெட்டபூமியைக் காக்குந் தொழிலிலே - எந்தப்போதுஞ் செலுத்திடுஞ் சிந்தையும் 5. ஆடலும் பாடலும் கண்டுநான் - முன்னர்ஆற்றங் கரையினில் கண்டதோர் - முனிவேடந் தரித்த கிழவரைக் - கொல்லவேண்டுமென் றுள்ளத்தில் எண்ணினேன் - சிறுநாடு புரந்திடு மன்னவன் - கண்ணன்நாளுங் கவலையில் மூழ்கினோன்; தவப்பாடுபட் டோர்க்கும் விளங்கிடா - உண்மைபார்த்திவன் எங்ஙனம் கூறுவான்? 6. என்று கருதி யிருந்திட்டேன் - பின்னர்என்னைத் தனியிடங் கொண்டுபோய், - நினைநன்று மருவுக! மைந்தனே! - பரஞான முரைத்திடக் கேட்பைநீ - நெஞ்சில்ஒன்றுங் கவலையில் லாமே - சிந்தைஊன்ற நிறுத்திக் களிப்புற்றே - தன்னைவென்று மறந்திடும் போழ்தினில் - அங்குவிண்ணை யளக்கும் அறிவுதான்! 7. சந்திரன் சோதி யுடையதாம் - அதுசத்திய நித்திய வஸ்துவாம்; - அதைச்சிந்திக்கும் போதினில் வந்துதான் - நினைச்சேர்ந்து தழுவி அருள்செயும்; அதன்மந்திரத் தாலிவ் வுலகெலாம் - வந்தமாயக் களிப்பெருங் கூத்துக்காண் - இதைச்சந்ததம் பொய்யென் றுரைத்திடும் - மடச்சாத்திரம் பொய் யென்று தள்ளடா! 8. ஆதித் தனிப்பொரு ளாகுமோர் - கடல்ஆருங் குமிழி உயிர்களாம் - அந்தச்சோதி யறிவென்னும் ஞாயிறு - தன்னைச்சூழ்ந்த கதிர்கள் உயிர்களாம்; இங்குமீதிப் பொருள்கள் எவையுமே - அதன்மேனியில் தோன்றிடும் வண்ணங்கள்-வண்ணநீதி யறிந்தின்பம் எய்தியே - ஒருநேர்மைத் தொழிலில் - இயங்குவார்; 9. சித்தத்தி லேசிவம் நாடுவார் - இங்குச்சேர்ந்து களித்துல காளுவார்; நல்லமத்த மதவெங் களிறுபோல் - நடைவாய்ந்திறு மாந்து திரிகுவார்; இங்குநித்தம் நிகழ்வ தனைத்துமே - எந்தைநீண்ட திருவரு ளால்வரும் - இன்பம்சுத்த சுகந்தனி யாநந்தம் - எனச்சூழ்ந்து கவலைகள் தள்ளியே  10. சோதி அறிவில் விளங்கவும் - உயர்சூழ்ச்சி மதியில் விளங்கவும் - அறநீதி முறைவழு வாமலே - எந்தநேரமும் பூமித் தொழில்செய்து - கலைஓதிப் பொருளியல் கண்டுதாம் - பிறர்உற்றிடுந் தொல்லைகள் மாற்றியே - இன்பம்மோதி விழிக்கும் விழியினார் - பெண்மைமோகத்தில், செல்வத்தில், கீர்த்தியில், 11. ஆடுதல், பாடுதல், சித்திரம் - கவியாதி யினைய கலைகளில் - உள்ளம்ஈடுபட் டென்றும் நடப்பவர் - பிறர்ஈன நிலைகண்டு துள்ளுவார் - அவர்நாடும் பொருள்கள் அனைத்தையும் - சிலநாளினில் எய்தப் பெருகுவார் - அவர்காடு புதரில் வளரினும் - தெய்வக்காவனம் என்றதைப் போற்றலாம். 12. ஞானியர் தம்மியல் கூறினேன் - அந்தஞானம் விரைவினில் எய்துவாய் - எனத்தேனி லினிய குரலிலே - கண்ணன்செப்பவும் உண்மை நிலைகண்டேன் - பண்டைஈன மனிதக் கனவெலாம் - எங்ஙன்ஏகி மறைந்தது கண்டிலேன்; அறிவான தனிச்சுடர் நான்கண்டேன்! - அதன்ஆட லுலகென நான் கண்டேன்! 8. கண்ணம்மா - என் குழந்தை (பராசக்தியைக், குழந்தையாகக் கண்டு சொல்லிய பாட்டு) (ராகம் - பைரவி) (தாளம் - ரூபகம்) ஸ ஸ ஸ - ஸா ஸா-பபபதநீத - பதப - பாபபப - பதப - பமா - கரிஸாரிகம - ரிகரி - ஸா என்ற ஸ்வர வரிசைகளை மாதிரியாக வைத்துக் கொண்டு மனோபாவப்படி மாற்றிப் பாடுக. 1. சின்னஞ் சிறு கிளியே, - கண்ணம்மா!செல்வக் களஞ்சியமே!என்னைக் கலி தீர்த்தே - உலகில்ஏற்றம் புரிய வந்தாய்! 2. பிள்ளைக் கனியமுதே, - கண்ணம்மாபேசும்பொற் சித்திரமே!அள்ளி யணைத்திடவே - என் முன்னேஆடி வருந் தேனே! 3. ஓடி வருகையிலே - கண்ணம்மாஉள்ளங் குளிரு தடீ!ஆடித்திரிதல் கண்டால் - உன்னைப்போய்ஆவி தழுவு தடீ! 4. உச்சி தனை முகந்தால் - கருவம்ஓங்கி வளரு தடீ!மெச்சி யுனை யூரார் - புகழ்ந்தால்மேனி சிலிர்க்குதடீ! 5. கன்னத்தில் முத்தமிட்டால் - உள்ளந்தான்கள்வெறி கொள்ளு தடீ!உன்னைத் தழுவிடிலோ - கண்ணம்மாஉன்மத்த மாகு தடீ! 6. சற்றுன் முகஞ் சிவந்தால் - மனதுசஞ்சல மாகு தடீ!நெற்றி சுருங்கக் கண்டால் - எனக்குநெஞ்சம் பதைக்கு தடீ! 7. உன்கண்ணில் நீர்வழிந்தால் - என்நெஞ்சில்உதிரங் கொட்டு தடீ!என்கண்ணிற் பாவையன்றோ? -  கண்ணம்மா!என்னுயிர் நின்ன தன்றோ? 8. சொல்லு மழலையிலே - கண்ணம்மா!துன்பங்கள் தீர்த்திடு வாய்;முல்லைச் சிரிப்பாலே - எனதுமூர்க்கந் தவிர்த்திடு வாய். 9. இன்பக் கதைக ளெல்லாம் - உன்னைப்போல்ஏடுகள் சொல்வ துண்டோ?அன்பு தருவதிலே - உனைநேர்ஆகுமொர் தெய்வ முண்டோ? 10. மார்பில் அணிவதற்கே - உன்னைப்போல்வைர மணிக ளுண்டோ?சீர்பெற்று வாழ்வதற்கே - உன்னைப்போல்செல்வம் பிரிது முண்டோ? 9. கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை கேதாரம் - கண்டஜாதி - ஏகதாளம்ரசங்கள்: அற்புதம், சிருங்காரம் தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை. (தீராத) 1. தின்னப் பழங்கொண்டு தருவான்; பாதிதின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான்;என்னப்பன் என்னையன் என்றால் அதனைஎச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான். (தீராத) 2. தேனொத்த பண்டங்கள் கொண்டு - என்னசெய்தாலும் எட்டாத உயரத்தில் வைப்பான்;மானொத்த பெண்ணடி என்பான் - சற்றுமனமகிழும் நேரத்தி லேகிள்ளி விடுவான். (தீராத) 3. அழகுள்ள மலர்கொண்டு வந்தே - என்னைஅழஅழச் செய்துபின், கண்ணை மூடிக்கொள்;குழலிலே சூட்டுவேன் என்பான் - என்னைக்குருடாக்கி மலரினைத் தோழிக்குவைப்பான். (தீராத) 4. பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலைபின்னே திரும்புமுன் னேசென்று மறைவான்;வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதிவாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான். (தீராத) 5. புள்ளாங் குழல்கொண்டு வருவான்; அமுதுபொங்கித் ததும்புநற் கீதம் படிப்பான்;கள்ளால் மயங்குவது போலே - அதைக்கண்மூடி வாய்திறந் தேகேட் டிருப்போம். (தீராத) 6. அங்காந் திருக்கும்வாய் தனிலே - கண்ணன்ஆறேழு கட்டெறும் பைப்போட்டு விடுவான்;எங்காகிலும் பார்த்த துண்டோ ? - கண்ணன்எங்களைச்செய்கின்ற வேடிக்கையொன்றோ? (தீராத) 7. விளையாட வாவென் றழைப்பான்; - வீட்டில்வேலையென் றாலதைக் கேளா திழுப்பான்;இளையாரொ டாடிக் குதிப்பான்; - எம்மைஇடையிற் பிரிந்துபோய் வீட்டிலே சொல்வான். (தீராத) 8. அம்மைக்கு நல்லவன் கண்டீர்! - மூளிஅத்தைக்கு நல்லவன், தந்தைக்கு மஃதே.எம்மைத் துயர்செய்யும் பெரியோர் - வீட்டில்யாவர்க்கும் நல்லவன் போலே நடப்பான். (தீராத) 9. கோளுக்கு மிகவுஞ் சமர்த்தன் - பொய்ம்மைகுத்திரம் பழிசொலச் கூசாச் சழக்கன்;ஆளுக் கிசைந்தபடி பேசித் - தெருவில்அத்தனை பெண்களையும் ஆகா தடிப்பான். (தீராத) 10. கண்ணன்-என் காதலன் செஞ்சுருட்டி-திஸ்ர ஏக தாளம்சிருங்கார ரசம் தூண்டிற் புழுவினைப்போல்-வெளியேசுடர் விளக்கினைப் போல்,நீண்ட பொழுதாக -எனதுநெஞ்சத் துடித்த தடீ! கூண்டுக் கிளியினைப் போல்-தனிமைகொண்டு மிகவும் நொந்தேன்;வேண்டும் பொருளை யெல்லாம்-மனதுவெறுத்து விட்ட தடீ! பாயின் மிசை நானும்-தனியேபடுத் திருக்கையி லே,வாயினில் வந்ததெல்லாம்-சகியே!தாயினைக் கண்டாலும்-சகியே!சலிப்பு வந்த தடீ! வளர்த்துப் பேசிடு வீர்;நோயினைப் போலஞ்சி னேன்;-சகியே!நுங்க ளுறவையெல் லாம். உணவு செல்லவில்லை;-சகியே!உறக்கங் கொள்ளவில்லை;மணம் விரும்பவில்லை;-சகியே!மலர் பிடிக்கவில்லை; குண முறுதி யில்லை;-எதிலும்குழப்பம் வந்த தடீ!கணமும் உள்ளத்திலே-சுகமேகாணக் கிடைத்த தில்லை. பாலுங் கசந்ததடீ!-சகியே!படுக்கை நொந்த தடீ!நாலு வயித்தியரும்-இனிமேல்நம்புதற் கில்லை யென்றார்;பாலந்துச் சோசியனும்-கிரகம்படுத்து மென்று விட்டான். கனவு கண்டதிலே-ஒருநாள்கண்ணுக்குத் தோன்றா மல்,இனம் விளங்க வில்லை-எவனோஎன்னகந் தொட்டு விட்டான்,வினவக் கண் விழித்தேன்;-சகியே!மேனி மறைந்து விட்டான்;மனதில மட்டிலுமே -புதிதோர்மகிழ்ச்சி கண்ட தடீ! உச்சி குளிர்ந்ததடீ;-சகியே!உடம்பு நேராச்சுமச்சிலும் வீடுமெல்லாம்-முன்னைப்போல்மனத்துக் கொத்த தடீ!இச்சை பிறந்ததடீ-எதிலும்இன்பம் விளைந்த தடீ;அச்ச மொழிந்த தடீ;-சகியே!அழகு வந்த தடீ! எண்ணும் பொழுதி லெல்லாம்-அவன்கைஇட்ட விடத்தினி லேதண்ணென் றிருந்ததடீ!-புதிதோர்சாந்தி பிறந்ததடீ!எண்ணி யெண்ணிப் பார்த்தேன்;-அவன்தான்யாரெனச் சிந்தை செய்தேன்;கண்ணன் திருவுருவம் -அங்ஙனேகண்ணின் முன் நின்ற தடீ! 11. கண்ணன் -என் காதலன் உறக்கமும் விழிப்பும்.நாத நாமக்கிரியை-ஆதி தாளம்ரசங்கள் :பீபத்ஸம்.சிருங்காரம்  நேரம் மிகுந்ததின்னும் நித்திரையின்றி-உங்கள்நினைப்புத் தெரியவில்லை,கூத்தடிக்கிறீர்;சோரன் உறங்கிவிழும் நள்ளி ரவிலே-என்னதூளி படுகுதடி,இவ்விடத்திலே?ஊரை யெழுப்பிவிட நிச்சயங் கொண்டீர்-அன்னைஒருத்தியுண் டென்பதையும் மறந்து விட்டீர்;சாரம் மிகுந்ததென்று வார்த்தை சொல்கிறீர்,-மிகச்சலிப்புக் தருகுதடி சகிப் பெண்களே! நானும் பலதினங்கள் பொறுத்திருந்தேன்,-இதுநாளுக்கு நாளதிக மாகிவிட் டதே;கூன னொருவன் வந்ததிந் நாணி பின்னலைக்கொண்டை மலர்சிதற நின்றிழுத்ததும்,ஆனைமதம் பிடித்திவ் வஞ்சி யம்மையின்அருகினி லோடஇவள் மூர்ச்சை யுற்றதும்பானையில் வெண்ணெய் முற்றும் தின்றுவிட்டதால்பாங்கி யுரோகிணிக்கு நோவு கண்டதும். பத்தினி யாளையொரு பண்ணை வெளியில்பத்துச் சிறுவர் வந்து முத்தமிட்டதும்,நத்தி மகளினுக்கோர் சோதிடன் வந்தநாற்ப தரசர் தம்மை வாக்களித்ததும்கொத்துக் கனல்விழியக் கோவினிப் பெண்ணைக்கொங்கத்து மூளிகண்டு கொக்கரித்ததும்,வித்தைப் பெயருடைய வீணியவளும்மேற்குத்திசை மொழிகள் கற்று வந்ததும். எத்தனை பொய்களடி! என்ன கதைகள்!என்னை உறக்கமின்றி இன்னல் செய்கிறீர்;சத்தமிடுங் குழல்கள் வீணைக ளெல்லாம்தாளங்க ளோடுகட்டி மூடிவைத் தங்கே;மெத்த வெளிச்சமின்றி ஒற்றை விளக்கைமேற்குச் சுவரருகில் வைத்ததன் பின்னர்நித்திரை கொள்ளஎனைத் தனியில் விட்டேநீங்களெல் லோருமுங்கள் வீடு செல்லுவீர்.(பாங்கியர் போன பின்பு தனியிருந்து சொல்லுதல்) கண்கள் உறங்கவொரு காரண முண்டோ,கண்ணனை இன்றிரவு காண்பதன் முன்னே?பெண்களெல் லோருமவர் வீடு சென்றிட்டார்;பிரிய மிகுந்த கண்ணன் காத்திருக்கின்றான்.வெண்கல வாணிகரின் வீதி முனையில்வேலிப் புறத்திலெனைக் காணடி யென்றான்;கண்கள் உறங்கலெனுங் காரிய முண்டோ,கண்ணனைக் கையிரண்டுங் கட்ட லின்றியே? 12. கண்ணன்-என் காதலன் (காட்டிலே தேடுதல்) ஹிந்துஸ்தானி தோடி-ஆதி தாளம்ரசங்கள்-பயாநகம், அற்புதம் திக்குத் தெரியாத காட்டில்-உனைத்தேடித் தேடி இளைத்தேனே. மிக்க நலமுடைய மரங்கள்,-பலவிந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப்பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்குபாடி நகர்ந்து வரு நதிகள்,-ஒரு   (திக்குத்) நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்,-எங்கும்நீளக் கிடக்குமலைக் கடல்கள்,-மதிவஞ்சித் திடுமகழிச் சுனைகள்,-முட்கள்மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்,-ஒரு  (திக்குத்) ஆசை பெறவிழிக்கும் மான்கள்-உள்ளம்அஞ்சக் குரல் பழகும்,புலிகள்,-நல்லநேசக் கவிதைசொல்லும் பறவை,-அங்குநீண்டே படுத்திருக்கும் பாம்பு,-ஒரு  (திக்குத்) தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன்சத்தத் தினிற்கலங்கும் யானை-அதன்முன்னின் றோடுமிள மான்கள்-இவைமுட்டா தயல்பதுங்குந் தவளை-ஒரு    (திக்குத்) கால்கை சோர்ந்துவிழ லானேன்-இருகண்ணும் துயில்படர லானேன்-ஒருவேல்கைக் கொண்டுகொலை வேடன்-உள்ளம்வெட்கங் கொண்டொழிய விழித்தான்-ஒரு    (திக்குத்) பெண்ணே உனதழகைக் கண்டு -மனம்பித்தங் கொள்ளு’ தென்று நகைத்தான்-அடிகண்ணே,எனதிருகண் மணியே-உனைக்கட்டித் தழுவமனங் கொண்டேன்.       (திக்குத்) சோர்ந்தே படுத்திருக்க லாமோ?-நல்லதுண்டக் கறிசமைத்துத் தின்போம்-சுவைதேர்ந்தே கனிகள்கொண்டு வருவேன்-நல்லதேங்கள் ளுண்டினிது களிப்போம்.         (திக்குத்) என்றே கொடியவிழி வேடன்-உயிர்இற்றுப் போகவிழித் துரைத்தான்-தனிநின்றே இருகரமுங் குவித்து-அந்தநீசன் முன்னர்இவை சொல்வேன்;          (திக்குத்) அண்ணா உனதடியில் வீழ்வேன்-எனைஅஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன்கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை-உன்தன்கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ? “ஏடீ,சாத்திரங்கள் வேண்டேன்-நினதின்பம் வேண்டுமடி,கனியே!-நின்தன்மோடி கிறுக்குதடி தலையை,-நல்லமொந்தைப் பழையகள்ளைப் போல காதா லிந்தவுரை கேட்டேன்-அடகண்ணா’வென் றலறி வீழ்ந்தேன்-மிகப்போதாக வில்லையிதற் குள்ளே-என்தன்போதந் தெளியநினைக் கண்டேன். கண்ணா!வேடனெங்கு போனான்?-உனைக்கண்டே யலறிவிழுந் தானோ?-மணிவண்ணா! என தபயக் குரலில்-எனைவாழ்விக்க வந்த அருள் வாழி! 13. கண்ணன்-என் காதலன் (பாங்கியைத் தூது விடுத்தல்) தங்கப் பாட்டு மெட்டுரசங்கள்: சிரங்காரம்,ரௌத்ரம் 1. கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம் (அடி தங்கமே தங்கம்)கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம்எண்ண முரைத்துவிடில் தங்கமே தங்கம்-பின்னர்ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். 2. கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்;அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்-என்னும்அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம் 3. சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே-எங்கும்தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?-அவையாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ 4. மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலைமறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே-கிழப்பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம். 5. ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனைஅழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்தூற்றி நகர்முரசு சாற்றுவ னென்றேசொல்லி வருவையடி தங்கமே தங்கம். 6. சோர மிழைத்திடையர் பெண்களுடனே-அவன்சூழ்ச்சித் திறமை ப காட்டுவ தெல்லாம்வீர மறக்குலத்து மாதரிடத்தேவேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ! 7. பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப்பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதிவந்திட்டான்-அதைப்பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே 8. நேர முழுதிலுமப் பாவி தன்னையே-உள்ளம்நினைத்து மறுகுதடி தங்கமே தங்கம்தீர ஒருசொலின்று கேட்டு வந்திட்டால்-பின்புதெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம். 14. கண்ணன்-என் காதலன் (பிரிவாற்றாமை)ராகம்-பிலஹரி 1. ஆசை முகமறந்து போச்சே-இதைஆரிடம் சொல்வேனடி தோழி?நேச மறக்கவில்லை நெஞ்சம்-எனில்நினைவு முகமறக்க லாமோ? 2. கண்ணில் தெரியுதொரு தோற்றம்-அதில்கண்ண னழழுமுழு தில்லை;நண்ணு முகவடிவு காணில்-அந்தநல்ல மலர்ச்சிரிப்பைக் காணோம் 3. ஓய்வு மொழிதலுமில்லாமல்-அவன்உறவை நினைத்திருக்கும் உள்ளம்வாயு முரைப்பதுண்டு கண்டாய்-அந்தமாயன் புகழினையெய் போதும். 4. கண்ணன் புரிந்துவிட்ட பாவம்-உயிர்க்கண்ண னுருமறக்க லாச்சு;பெண்க ளினத்திலிது போல-ஒருபேதையை முன்புகண்ட துண்டோ? 5. தேனை மறந்திருக்கும் வண்டும்-ஒளிச்சிறப்பை மறந்துவிட்ட பூவும்வானை மறந்திருக்கும் பயிரும்-இந்தவைய முழுதுமில்லை தோழி! 6. கண்ணன் முகமறந்து போனால்-இந்தக்கண்க ளிருந்துபய னுண்டோ?வண்ணப் படமுமில்லை கண்டாய்-இனிவாழும் வழியென்னடி தோழி? 15. கண்ணன்-என் காந்தன் வராளி-திஸ்ர ஏக தாளம்சிருங்கார ரசம் 1. கனிகள் கொண்டுதரும்-கண்ணன்கற்கண்டு போலினிதாய்;பனிசெய் சந்தனமும்-பின்னும்பல்வகை அத்தர்களும்,குனியும் வாண்முகத்தான்-கண்ணன்குலவி நெற்றியிலேஇனிய பொட்டிடவே-வண்ணம்இயன்ற சவ்வாதும். 2. கொண்டை முடிப்பதற்கே-மணங்கூடு தயிலங்களும்,வண்டு விழியினுக்கே-கண்ணன்மையுங் கொண்டுதரும்;தண்டைப் பதங்களுக்கே-செம்மைசார்த்துசெம் பஞ்சுதரும்;பெண்டிர் தமக்கெல்லாம்-கண்ணன்பேசருந் தெய்வமடி! 3. குங்குமங் கொண்டுவரும்-கண்ணன்குழைத்து மார்பெழுத;சங்கையி லாதபணம்-தந்தேதழுவி மையல் செய்யும்;பங்கமொன் றில்லாமல்-முகம்பார்த்திருந் தாற்போதும்;மங்கள மாகுமடீ!-பின்னோர்வருத்த மில்லையடீ! 16. கண்ணம்மா-என் காதலி (காட்சி வியப்பு) செஞ்சுருட்டி-ஏகதாளம்ரசங்கள்:சிருங்காரம்,அற்புதம் 1. சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா!சூரிய சந்திர ரோ?வட்டக் கரிய விழி,-கண்ணம்மா!வானக் கருமை கொல்லோ?பட்டுக் கருநீலப்-புடவைபதித்த நல் வயிரம்நட்ட நடு நிசியில்-தெரியும்நக்ஷத் திரங்க ளடி! 2. சோலை மல ரொளியோ-உனதுசுந்தரப் புன்னகை தான்?நீலக் கட லலையே-உனதுநெஞ்சி லலைக ளடி!கோலக் குயி லோசை-உனதுகுரலி னிமை யடீ!வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா!மருவக் காதல் கொண்டேன். 3. சாத்திரம் பேசு கிறாய்,-கண்ணம்மா!சாத்திர மேதுக் கடீ!ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா!சாத்திர முண்டோ டீ!மூத்தவர் சம்ம தியில்-வதுவைமுறைகள் பின்பு செய்வோம்;காத்திருப் பேனோ டீ?-இது பார்.கன்னத்து முத்த மொன்று! 17. கண்ணம்மா-என் காதலி (பின்னே வந்து நின்று கண் மறைத்தல்)நாதநாமக்கிரியை-ஆதிதாளம்சிருங்கார ரசம் மாலைப் பொழுதிலொரு மேடை மிசையேவானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;மூலைக் கடலினையவ் வான வளையம்முத்தமிட் டேதழுவி முகிழ்த்தல் கண்டேன்;நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,நேரங் கழிவ திலும் நினைப்பின்றியேசாலப் பலபலநற் பகற் கனவில்தன்னை மறந்தலயந் தன்னில் இருந்தேன். 1 ஆங்கப் பொழுதிலென் பின்பு றத்திலே,ஆள்வந்து நின்றெனது கண்ம றைக்கவே,பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன். 2 சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.திருமித் தழுவி“என்ன செய்தி சொல்என்றேன்;“நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.பெற்ற நலங்கள் என்ன?பேசுதிஎன்றாள். 3 “நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன். 4 18. கண்ணம்மா-என் காதலி (முகத்திரை களைதல்)நாதநாமக்கிரியை -ஆதி தாளம்சிருங்கார ரசம் தில்லித் துருக்கர் செய்த வழக்கமடீ!-பெண்கள்திரையிட்டு முகமலர் மறைத்து வைத்தல்;வல்லி யிடையினையும் ஓங்கி முன்னிற்கும்-இந்தமார்பையும் மூடுவது சாத்திரங் கண்டாய்;வல்லி யிடையினையும் மார்பி ரண்டையும்-துணிமறைத்தத னாலழகு மறைந்த தில்லை;சொல்லித் தெரிவ திலலை,மன்மதக்கலை-முகச்சோதி மறைத்துமொரு காதலிங் குண்டோ? 1 ஆரியர் முன்னெறிகள் மேன்மை யென்கிறாய்-பண்டைஆரியப் பெண்களுக்குத் திரைகள் உண்டோஓரிரு முறைகண்டு பழகிய பின்-வெறும்ஒப்புக்குக் காட்டுவதிந் நாண மென்னடீ?யாரிருந் தென்னை யிங்கு தடுத்திடுவார்-வலுவாக முகத்திரையை அகற்றி விட்டால்?காரிய மில்லையடி வீண்ப சப்பிலே -கனிகண்டவன் தோலுரிக்கக் காத்தி ருப்பேனோ? 2 19. கண்ணம்மா-என் காதலி (நாணிக் கண் புதைத்தல்)நாதநாமக்கிரியை-ஆதிதாளம்சிருங்கார ரசம் மன்னர் குலத்தினிடைப் பிறந்தவளை-இவன்மருவ நிகழ்ந்ததென்று நாண முற்றதோ?சின்னஞ் சிறுகுழந்தை யென்ற கருத்தோ?-இங்குசெய்யத் தகாதசெய்கை செய்தவ ருண்டோ?வன்ன முகத்திரையைக் களைந்தி டென்றேன்-நின்றன்மதங்கண்டு துகிலினை வலிதுரிந்தேன்.என்ன கருத்திலடி கண்புதைக்கிறாய்?-எநனக்கெண்ணப் படுவதில்லை யேடி கண்ணம்மா! 1 கன்னி வயதிலுனைக் கண்ட தில்லையோ?-கன்னங்கன்றிச் சிவக்க முத்த மிட்ட தில்லையோ!அன்னிய மாகநம்மள் எண்ணுவ தில்லை-இரண்டாவுயுமொன் றாகுமெனக் கொண்ட தில்லையோ?பன்னிப் பலவுரைகள் சொல்லுவ தென்னே? துகில்பறித்தவன் கைபறிக்கப் பயங்கொள்வனோஎன்னைப் புறமெனவுங் கருதுவதோ-கண்கள்இரண்டினில் ஒன்றையொன்று கண்டு வெள்குமோ? 2 நாட்டினிற் பெண்களுக்கு நாயகர் சொல்லும்-சுவைநைந்த பழங்கதைகள் நானுரைப்பதோ?பாட்டுஞ் சுதியு மொன்று கலந்திடுங்கால்-தம்முள்பன்னி உபசரணை பேசுவ துண்டோ?நீட்டுங் கதிர்களொடு நிலவு வந்தே-விண்ணைநின்று புகழ்ந்துவிட்டுப் பின்மருவுமோ?மூட்டும் விறகினையச் சோதி கவ்வுங்கால்-அவைமுன்னுப சாரவகை மொழிந்திடுமோ? 3 சாத்திரக் காரரிடம் கேட்டு வந்திட்டேன்;-அவர்சாத்திரஞ் சொல்லியதை நினக்குரைப்பேன்;நேற்று முன்னாளில் வந்த உறவன் றடீ!-மிகநெடும்பண்டைக் காலமுதல் சேர்ந்து வந்ததாம்.போற்றுமி ராமனென முன்புதித்தனை,-அங்குபொன்மிதிலைக் கரசன் பூமடந்தை நான்;ஊற்றமு தென்னவொரு வேய்ங்குழல் கொண்டோன்-கண்ணன்உருவம் நினக்கமையப் பார்த்தன் அங்குநான். 4 முன்னை மிகப்பழமை இரணியனாம்-எந்தைமூர்க்கந் தவிர்க்க வந்த நரசிங்கன் நீ;பின்னையொர் புத்தனென நான் வளர்ந்திட்டேன்-ஒளிப்பெண்மை அசோதரையென் றுன்னை யெய்தினேன்.சொன்னவர் சாத்திரத்தில மிகவல்லர் காண்;-அவர்சொல்லிற் பழுதிருக்கக் காரண மில்லை;இன்னுங் கடைசிவரை ஒட்டிருக்குமாம்;-இதில்ஏதுக்கு நாண முற்றுக் கண்புதைப்பதே? 5 20. கண்ணம்மா-என் காதலி (குறிப்பிடம் தவறியது)செஞ்சுருட்டி-ஆதிதாளம்சிருங்கார ரசம் தீர்த்தக் கரையினிலே-தெற்கு மூலையில்செண்பகத் தோட்டத்திலே,பார்த்திருந்தால் வருவேன்-வெண்ணிலாவிலேபாங்கியோ டென்று சொன்னாய்வார்த்தை தவறிவிட்டாய்-அடி கண்ணம்மா!மார்பு துடிக்கு தடீ!பார்த்த விடத்திலெல்லாம்-உன்னைப்போலவேபாவை தெரியு தடி!  1 மேனி கொதிக்கு தடி!-தலை சுற்றியேவேதனை செய்கு தடீ!வானி லிடத்தை யெல்லாம்-இந்த வெண்ணிலாவந்து தழுவுது பார்!மோனத் திருக்குதடீ! இந்த வையகம்மூழ்கித் துயிலினிலே,நானொருவன் மட்டிலும்-பிரி வென்பதோர்நரகத் துழலுவதோ?  2 கடுமை யுடைய தடீ!எந்த நேரமும்காவலுன் மாளிகையில்;அடிமை புகுந்த பின்னும்-எண்ணும்போது நான்அங்கு வருதற் கில்லை;கொடுமை பொறுக்க வில்லை-கட்டுங் காவலும்கூடிக் கிடக்கு தங்கே;நடுமை யரசி யவள்-எதற் காகவோநாணிக் குலைந்திடுவாள்.  3 கூடிப் பிரியாமலே ஓரி-ராவெலாம்கொஞ்சிக் குலவி யங்கேஆடி விளை யாடியே,-உன்றன் மேனியைஆயிரங் கோடி முறைநாடித் தழுவி மனக்-குறை தீர்ந்து நான்நல்ல களி யெய்தியேபாடிப் பரவசமாய்-நிற்கவே தவம்பண்ணிய தில்லை யடி!  4 21. கண்ணம்மா-என் காதலி யோகம் பாயு மொளி நீ யெனக்கு,பார்க்கும் விழி நானுனக்கு,தோயும் மது நீ யெனக்கு,தும்பியடி நானுனக்கு.வாயுரைக்க வருகுதில்லை,வாழி நின்றன் மேன்மையெல்லாம்;தூயசுடர் வானொளியே! சூறையமுதே!கண்ணம்மா! 1 வீணையடி நீ யெனக்கு,மேவும் விரல் நானுனக்கு;பூணும் வடம் நீ யெனக்கு,புது வரிம் நானுனக்கு;காணுமிடந்தோறு நின்றன் கண்ணி னொளி வீசுதடீமாணுடைய பேர ரசே! வாழ்வு நிலையே!கண்ணம்மா! 2 வான மழை நீ யெனக்கு வண்ண மயில் நானுனக்கு;பான மடி நீ யெனக்கு,பாண்டமடி நானுனக்கு;ஞான வொளி வீசுதடி,நங்கை நின் றன் சோதிமுகம்,ஊனமறு நல்லழகே!ஊறு சுவையே!கண்ணம்மா!  3 வெண்ணிலவு நீ யெனக்கு,மேவு கடல் நானுனக்கு;பண்ணு சுதி நீ யெனக்கு,பாட்டினிமை நானுனக்கு;எண்ணியெண்ணிப் பார்த்திடிலோர் எண்ணமில்லை நின்சுவைக்கே;கண்ணின் மணி போன்றவளே! கட்டியமுதே!கண்ணம்மா! 4 வீசு கமழ் நீ யெனக்கு,விரியுமலர் நானுனக்கு;பேசுபொருள் நீ யெனக்கு,பேணுமொழி நானுனக்கு;நேசமுள்ள வான்சுடரே! நின்னழகை யேதுரைப்பேன்?ஆசை மதுவே!கனியே!அள்ளு சுவையே கண்ணம்மா! 5 காதலடி நீ யெனக்கு,காந்தமடி நானுனக்கு;வேதமடி நீ யெனக்கு,வித்தையடி நானுனக்கு;போதமுற்ற போதினிலே பொங்கி வருந் தீஞ்சுவையே!நாதவடி வானவளே! நல்லஉயிரே கண்ணம்மா!  6 நல்லவுயிர் நீ யெனக்கு,நாடியடி நானுனக்கு;செல்வமடி நீ யெனக்கு,சேமநிதி நானுனக்கு;எல்லையற்ற பேரழகே!எங்கும் நிறை பொற்சுடரே!முல்லைநிகர் புன்னகையாய்!மோதுமின்பமே!கண்ணம்மா! 7 தாரையடி நீ யெனக்கு,தண்மதியம் நானுனக்கு;வீரமடி நீ யெனக்கு,வெற்றியடி நானுனக்கு;தாரணியில் வானுலகில் சார்ந்திருக்கும் இன்பமெல்லாம்ஓருருவமாய்ச் சமைந்தாய்!உள்ளமுதமே!கண்ணம்மா! 8 22. கண்ணன்-என் ஆண்டான் புன்னாகவராளி-திஸ்ர ஏகதாளம்ரசகங்கள் : அற்புதம்,கருணை தஞ்ச முலகினில் எங்கணு மின்றித்தவித்துத் தடுமாறிபஞ்சைப் பறையன் அடிமை புகுந்தேன்,பார முனக் காண்டே!ஆண்டே!-பாரமுனக் காண்டே!  1 துன்பமும் நோயும் மிடிமையுந் தீர்த்துச்சுகமருளல் வேண்டும்;அன்புடன் நின்புகழ் பாடிக்குறித்து நின்ஆணை வழி நடப்பேன்;ஆண்டே-ஆணைவழி நடப்பேன்.  2 சேரிமுழுதும் பறையடித் தேயருட்சீர்த்திகள் பாடிடுவேன்?பேரிகை கொட்டித் திசைக ளதிர நின்பெயர் முழுக்கிடுவேன்;ஆண்டே!-பெயர் முழக்கிடுவேன்.  3 பண்ணைப் பறையர்தங் கூட்டத்தி லேயிவன்பாக்கிய மோங்கி விட்டான்;கண்ணனடிமை யிவனெனுங் கீர்த்தியில்காதலுற் றங்கு வந்தேன்;ஆண்டே! காதலுற் றிங்கு வந்தேன்; 4 காடு கழனிகள் காத்திடுவன்,நின்றன்காலிகள் மேய்த்திடுவேன்;பாடுபடச் சொல்லிப் பார்த்ததன் பின்னரென்பக்குவஞ் சொல்லாண்டே!ஆண்டே!-பக்குவஞ் சொல்லாண்டே! 5 தோட்டங்கள் மொத்திச் செடி வளர்க்கச் சொல்லிச்சோதனை போடாண்டே!காட்டு மழைழக்குறி தப்பிச் சொன்னா லெனைக்கட்டியடி யாண்டே!ஆண்டே!-கட்டியடி யாண்டே!  6 பெண்டு குழந்தைகள் கஞ்சி குடித்துப்பிழைத்திட வேண்டுமையே!அண்டை யயலுக்கென் னாலுப காரங்கள்ஆகிட வேண்டுமையே?உபகாரங்கள்-ஆகிட வேண்டுமையே! 7 மானத்தைக் காக்கவோர் நாலு முழத்துணிவாங்கித் தரவேணும்;தானத்துகுச் சில வேட்டிகள் வாங்கித்தரவுங் கடனாண்டே!சில வேட்டி-தரவுங் கடனாண்டே! 8 ஒன்பது வாயிற் குடிலினைச் சுற்றியொரு சில பேய்கள் வந்தேதுன்பப் படுத்துது மந்திரஞ் செய்துதொலைத்திட வேண்டுமையே!பகையாவுந் -தொலைத்திட வேண்டுமையே! 9 பேயும் பிசாசுந் திருடரு மென்றன்பெயரினைக் கேட்டளவில்,வாயுங் கையுங்கட்டி அஞ்சி நடக்கவழி செய்ய வேண்டுமையே!தொல்லைதீரும்-வழிசெய்ய வேண்டுமையே! 10 23. கண்ணம்மா-எனது குல தெய்வம் ராகம்-புன்னாக வராளிபல்லவி நின்னைச் சரணடைந்தேன்-கண்ணம்மா!நின்னைச் சரணடைந்தேன்! சரணங்கள் பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று  (நின்) மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்குடிமை புகுந்தன,கொன்றவை போக்கென்று  (நின்) தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்குநின்செயல் செய்து நிறைவு பெறும்வணம்  (நின்) துன்ப மினியில்லை.சோர்வில்லை,தோற்பில்லை,அன்பு நெறியில் அறங்கள் வளர்ந்திட  (நின்) நல்லதுதீயது நாமறியோம் அன்னைநல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக!      (நின்)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !