பராசக்தி கோவிலில் பால்குடம் ஊர்வலம்
ADDED :2744 days ago
கடலுார்: கடலுார் ஆயுதப்படை காவலர் குடியிருப்பு பராசக்தி மாரியம்மன் கோவிலில் பால்குடம் ஊர்வலம் நடந்தது. செடல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று காலை மகா கணபதி ேஹாமம், அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து, சித்தி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் ஊர்வலம் துவங்கி, பராசக்தி மாரியம்மன் கோவிலில் அபிஷேகம், கொடியேற்றுதல் நடந்தது. பக்தர்கள் திரளாக சுவாமி தரிசனம் செய்தனர். இன்று 27ம் தேதி காலை 8:00 மணிக்கு அபிஷேக ஆராதனை, சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தீபாராதனை, மதியம் 2:00 மணிக்கு சாகை வார்த்தல், 4:00 மணிக்கு செடல் உற்சவம், மாலை 6:00 மணிக்கு கும்பம் கொட்டுதல் நடக்கிறது. 28ம் தேதி மதியம் 3:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழா, இரவு 7:00 மணிக்கு அம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து, உதரவாய் துடைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது.