சிதம்பரம் மாரியம்மன் கோவில் ஆடி தீமிதி உற்சவ தேரோட்டம்
சிதம்பரம்: கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி பிரமோற்சவத்தையொட்டி தீமிதி உற்சவ தேரோட்டம் நேற்று சிதம்பரத்தில் நடந்தது.பிரசித்திப் பெற்ற சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் ஆடி பிரமோற்சவம் கடந்த 20ம் தேதி இரவு கொடியேற்று விழாவுடன் துவங்கியது. இதனையொட்டி மாரியம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனைகள் நடக்கிறது.
கடந்த 24ம் தேதி தெருவடைச்சான் தேரோட்டம் நடந்தது. நேற்று கீழத்தெரு மாரியம்மன் தேரோட்டம் நடந்தது.தேரோட்டத்தையொட்டி அதிகாலை மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. காலை 7 மணிக்கு நடராஜர் கீழவீதியில் இருந்த தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பகல் 12 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று மாரியம்மனுக்கு வஸ்திரம் உள்ளிட்ட வரிசைகள் எடுத்து வந்து தீட்சிதர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். பின்னர் பக்தர்கள் மாரியம்மன் திருத்தேர் வடம் பிடித்துஇழுத்து சென்றனர். இதில் ஆயிரக்கனக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.மாலை 6 மணிக்கு தேர் நடராஜர் கிழக்கு சன்னதியில் நிலைக்கு வந்து, அங்கிருந்து கோவிலுக்கு புறப்பாடு நடக்கும். இன்று (30ம் தேதி) மாலை ஆடித் தீமிதி உற்சவம் நடக்கிறது. அம்மன் மகா மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். காலை பக்தர்கள் அங்கப்பிரதட்சனம், அலகு குத்துதல், பெண்கள் சிறப்பு பூஜைகள் செய்து பிரார்த்தனை நிவர்த்தி நடக்கிறது. மாலை கரகம், காவடி எடுத்து பக்தர்கள் தீக்குண்டம் இறங்கும் தீமிதி உற்சவம் நடக்கிறது.