உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேய்பிறை அஷ்டமி: பைரவரை வழிபட்ட திரளான பக்தர்கள்

தேய்பிறை அஷ்டமி: பைரவரை வழிபட்ட திரளான பக்தர்கள்

தலைவாசல்: ஆவணி தேய்பிறை அஷ்டமி, ஸ்தானுஷ்டமியாக கொண்டாடப்படுகிறது. அதை முன்னிட்டு, தலைவாசல், ஆறகளூர், காமநாதீஸ்வரர் கோவிலில், அஷ்ட பைரவருக்கு, நேற்று காலை, பால், தயிர், நெய் உள்ளிட்டவற்றால், மூலவர் காமநாதீஸ்வரருக்கு அபிஷேகம் நடந்தது. ஐந்து வகை எண்ணெயால், பஞ்ச தீபமேற்றி, பைரவருக்கு உகந்த செவ்வரளிப்பூவை வைத்து, திரளானோர் வழிபட்டனர். தொடர்ந்து, எட்டு பைரவர்களுக்கு, தனித்தனியாக சிறப்பு வழிபாடு நடந்தது. காமநாதீஸ்வரர், பெரிய நாயகி அம்மன், சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மாலை நடந்த மஹா தீபாராதனையில், ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !