உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தியில் உண்டியல் வசூல் ரூ.74 லட்சம்

காளஹஸ்தியில் உண்டியல் வசூல் ரூ.74 லட்சம்

நகரி: காளஹஸ்தி கோவில் உண்டியலில், 21 நாட்களில் பக்தர்கள் காணிக்கையாக, 74.04 லட்சம் ரூபாய் செலுத்தி உள்ளனர். சித்தூர் மாவட்டம், காளஹஸ்தியில், வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமியை தரிசிக்கின்றனர்.

பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை மூலம், 21 நாட்களில், 74 லட்சத்து, 4 ஆயிரத்து, 523 ரூபாய் ரொக்கம், 76 கிராம் தங்கம், 285 கிலோ வெள்ளி, 186 வெளிநாட்டு கரன்சிகள் ஆகியவை இருந்தன. மேற்கண்ட தகவலை, கோவில் நிர்வாக அதிகாரி ராமசாமி தெரிவித்தார்.

காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு, மும்பையைச் சேர்ந்த தனியார் நிறுவனம் சார்பில், 21 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய சொகுசு பேருந்தை வழங்கும் வகையில், பேருந் தின் சாவியை, நிறுவன அதிகாரி ஒருவர், கோவில் அதிகாரி ராமசாமியிடம் காணிக்கையாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !