நாமக்கல் ஆவணி அமாவாசை ஆஞ்சநேயருக்கு சொர்ணாபிஷேகம்
ADDED :2587 days ago
நாமக்கல்: ஆவணி அமாவாசையை முன்னிட்டு, நாமக்கல் ஆஞ்சநேயருக்கு, சிறப்பு சொர்ணாபிஷேகம் நடந்தது. ஒவ்வொரு தமிழ் மாதமும், முதல் ஞாயிற்றுக்கிழமை, பவுர்ணமி, அமாவாசை உள்ளிட்ட விசேஷ நாட்களில், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெறும். நேற்று (செப்., 9ல்) ஆவணி அமாவாசையை முன்னிட்டு காலை, 9:00 மணிக்கு ஆஞ்சநேயருக்கு வடை மாலை அலங்காரம் நடந்தது. 10:00 மணிக்கு நல்லெண்ணெய், சீயக்காய், பால், தயிர், வெண்ணெய், தேன், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம், மஞ்சள், சந்தனம் போன்ற பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சொர்ணாபிஷேகம் நடந்தது. மதியம், சுவாமிக்கு வெள்ளி கவசம் சாற்றி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.