உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலுாரில் கஞ்சி கலய ஊர்வலம்

திருக்கோவிலுாரில் கஞ்சி கலய ஊர்வலம்

திருக்கோவிலுார்: திருக்­கோ­வி­லுார் என்.ஜி.ஜி.ஓ., நகர், ஓம் சக்தி வழி­பாட்டு மன்­றம் சார்­பில், பக்­தர்­கள் கஞ்சி கல­யம் எடுத்து வழி­பாடு செய்­த­னர். திருக்­கோ­வி­லுார், என்.ஜி.ஜி.ஓ., நகர், மேல்­ம­ரு­வத்­துார் ஓம் சக்தி வழி­பாட்டு மன்­றத்­தின் சார்­பில், நேற்று பக்­தர்­கள் கஞ்சி கலை­யம் எடுக்­கும் நிகழ்ச்சி நடந்­தது. காலை 11:00 மணிக்கு, வேண்­டு­தல் உள்ள பக்­தர்­கள் கோவில் வளா­கத்­தில் இருந்து கஞ்சி கல­யம் எடுத்து ஊர்­வ­ல­மாக புறப்­பட்­ட­னர். மன்ற தலை­வர் வெங்­க­டே­சன் தலைமை தாங்­கி­னார். துணைத்­த­லை­வர் தெய்­வ­மணி முன்­னிலை வகித்­தார். பக்­தர்­கள் கஞ்சி கல­யம் எடுத்து முக்­கிய வீதி­கள் வழி­யாக ஊர்வ­ல­மாக சென்று கோவிலை அடைந்­த­னர். சிறப்பு பூஜை­க­ளுக்கு பின்­னர் படைக்­கப்­பட்டு கஞ்சி பக்­தர்­க­ளுக்கு வினி­யோ­கிக்­கப்­பட்­டது. மன்ற செய­லர் சாந்தி உள்­ளிட்­டோர் கலந்து கொண்­ட­னர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !