உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், புரட்டாசி மாத, முதல் ஞாயிறு முன்னிட்டு, ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குமாரபாளையம் அக்ரஹாரம், லட்சுமிநாராயண சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில், புரட்டாசி மாத முதல் ஞாயிறு (செப்., 23)ல் முன்னிட்டு சுவாமிக்கு பால், தயிர், மஞ்சள், திருமஞ்சனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தன. பக்தர்கள், பக்தி பாடல்கள் பாடி இறைவனை வணங்கினர். சுவாமிக்கு சிறப்பு அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !