உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

வடுக்குப்பம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம்

வடுக்குப்பம்: பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் வரும் 6ம் தேதி நடக்கிறது.நெட்டப்பாக்கம் அடுத்துள்ள வடுக்குப்பம் கிராமத்தில் அமைந்துள்ள பத்மாவதி தாயார் சமேத பிரசன்ன வெங்கடசே பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமையை முன்னிட்டு, 6ம் தேதி காலை 7.00 மணிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. காலை, 10.00 மணிக்கு தீபாராதனை, இரவு 8.00 மணிக்கு கருட சேவை உற்சவம் நடக்கிறது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !