அவலூர்பேட்டை கோவில்களில் நவராத்திரி விழா
ADDED :2616 days ago
அவலூர்பேட்டை:அவலூர்பேட்டை கோவில்களில் நவராத்திரி விழா துவங்கியது. மேல்மலை யனூர் தாலுகா அவலூர்பேட்டை ராமலிங்க சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று
முன்தினம் (அக்., 11ல்) நவராத்திரி விழா துவங்கியது.
இதை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தாமிரபரணி அன்னை அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொலு பொம்மைகள் வைக்கப்பட்டது. இதே போல் ஓம்சக்தி கோவிலிலும் நவராத்திரி விழா துவங்கியது. பக்தர்கள் திரளாக
கலந்து கொண்டனர்.