நாமக்கல்லில் தேய்பிறை அஷ்டமி விழா: காலபைரவருக்கு பக்தர்கள் வழிபாடு
ADDED :2548 days ago
நாமக்கல்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, நாமக்கல் காலபைரவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. நாமக்கல், ஏகாம்பரேஸ்வரர் கோவில், அக்னி காலபைரவருக்கு, தேய்பிறை
அஷ்டமி விழா, நேற்று (அக்., 31ல்) கொண்டாப்பட்டது.
மாலை, 4:30 மணிக்கு பைரவருக்கு மஞ்சள், குங்குமம், தேன், பால், தயிர், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, சுவாமிக்கு ஏலக்காய், திராட்சை, தேங்காய் மற்றும் அதிரச மாலைகள் அணிவிக்கப்பட்டன.
அதேபோல், உற்சவருக்கும் அபிஷேகம் செய்யப்பட்டது. பின், சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாரதனை நடந்தது. பக்தர்கள் திருவாசகம் பாடியும், தேங்காய், எலுமிச்சை, பூசணி ஆகியவற்றில் நெய் தீபம் ஏற்றியும் நேர்த்திக் கடன் செலுத்தினர்.